வியாழன், 7 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 19

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 19


"கோவிட்19" தொற்று பரவிக் கொண்டிருந்த காலம் அது.

எனவே பள்ளிவாசலுக்கு வருபவர்கள் கண்டிப்பாக சொந்த தொழுகை விரிப்பு எடுத்து வரவேண்டும் என்ற நடைமுறையை அனைவரும் பின்பற்றினர்.


ஒரு நாள் இமாம், ஜமாஅத் தொழுகையை முடித்ததும் முதல் ஸஃப்பின் வலது ஓரத்தில் சிறிய சலசலப்பு.


என்னவென்று இமாம் கவனித்தார்; அப்போதுதான், ஒருவர் தொழுகை விரிப்பை மடித்த நிலையிலேயே வைத்து அதன் மீது ஸஜ்தா செய்துள்ளார் என்பதும் அப்படித் தொழுதால் தொழுகை கூடாது என்று இன்னொருவரும் பேசிக்கொண்டது தெரிய வந்தது.


உடனே இமாம் தலையிட்டு, அவர்களை அமைதி படுத்தி, தொழுகை விரிப்பு போன்றவைகளை மடித்து வைத்து, ஸஜ்தா செய்தால் தலை (அங்குமிங்கும் புரளாமல்) நிலை கொள்ளும் என்ற சூழலில்  தொழுகை கூடி விடும்.



 ஏனென்றால், கால் இருக்கும் இடத்தை விட ஸஜ்தா செய்யும் இடத்தின் உயரம் அரை முழம் (முக்கால் அடிக்குள்) இருக்கும் வரை பிரச்சனை இல்லை தொழுகை கூடிவிடும். 


அதைவிட அதிகமான உயரமுள்ள பொருட்கள் மீது (தகுந்த காரணமின்றி) ஸஜ்தா செய்து தொழுதால் தான் கூடாது.


 ஆனால் குறிப்பிட்ட அந்த அளவைவிட குறைவான உயரம் இருக்கும் போது தொழுகை கூடிவிடும் என்றாலும் அப்படிச் செய்வது சிறப்பான காரியமல்ல.


 ஏனெனில், தொழக்கூடியவரின் தலை எந்தளவு பூமிக்கு நெருக்கமாக இருக்குமோ அநதளவு சிறப்பு.


 குறிப்பு:- (காற்று அடைக்கப்பட்ட பலூன், விளையாட்டு பொம்மைகள் போன்று) தரையில் தலையை நிலைகொள்ள விடாமல் அங்குமிங்கும் புரளச் செய்யும்படியான பொருட்கள் மீது ஸஜ்தா செய்தால் தொழுகை கூடாது.

 


تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 117):


وَلَوْ ارْتَفَعَ مَوْضِعُ السُّجُودِ عَنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ قَدْرَ لَبِنَةٍ أَوْ لَبِنْتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ لَا إنْ زَادَ.


 


                                                                                                                                    البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (1 / 338):


 وَكَذَا إذَا أَلْقَى الْحَشِيشَ فَسَجَدَ عَلَيْهِ إنْ وَجَدَ عَلَيْهِ حَجْمَهُ جَازَ وَإِلَّا فَلَا، وَكَذَا فِي التِّبْنِ وَالْقُطْنِ وَمِنْ هُنَا يُعْلَمُ جَوَازُ أَدَاءِ الصَّلَاةِ عَلَى الطَّرَّاحَةِ الْقُطْنِ، فَإِنْ وَجَدَ الْحَجْمَ جَازَ وَإِلَّا فَلَا وَهَذَا الْقَيْدُ لَا بُدَّ مِنْهُ فِي السُّجُودِ عَلَى كَوْرِ الْعِمَامَةِ وَطَرَفِ الْقَلَنْسُوَةِ كَمَا صَرَّحَ بِهِ فِي الْمُجْتَبَى، وَفِي مُنْيَةِ الْمُصَلِّي، وَلَوْ أَنَّ مَوْضِعَ السُّجُودِ أَرْفَعُ مِنْ مَوْضِعِ الْقَدَمَيْنِ مِقْدَارَ لَبِنَتَيْنِ مَنْصُوبَتَيْنِ جَازَ، وَإِنْ كَانَ أَكْثَرَ لَا يَجُوزُ أَرَادَ لَبِنَةَ بُخَارَى، وَهُوَ رُبْعُ ذِرَاعٍ. اهـ    


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 502):

 وَأَمَّا عَلَى الْخِرْقَةِ وَنَحْوِهَا فَالصَّحِيحُ عَدَمُ الْكَرَاهَةِ، فَفِي الْحَدِيثِ الصَّحِيحِ «أَنَّهُ - عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ - كَانَ تُحْمَلُ لَهُ الْخِمْرَةُ فَيَسْجُدُ عَلَيْهَا» وَهِيَ حَصِيرٌ صَغِيرَةٌ مِنْ الْخُوصِ؟ وَيُحْكَى عَنْ الْإِمَامِ أَنَّهُ سَجَدَ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى الْخِرْقَةِ فَنَهَاهُ رَجُلٌ، فَقَالَ لَهُ الْإِمَامُ مِنْ أَيْنَ أَنْتَ؟ فَقَالَ: مِنْ خُوَارِزْمَ، فَقَالَ الْإِمَامُ: جَاءَ التَّكْبِيرُ مِنْ وَرَائِي: أَيْ تَتَعَلَّمُونَ مِنَّا ثُمَّ تُعَلِّمُونَا، هَلْ تُصَلُّونَ عَلَى الْبَوَارِي فِي بِلَادِكُمْ؟ قَالَ نَعَمْ، فَقَالَ: تُجَوِّزُ الصَّلَاةَ عَلَى الْحَشِيشِ وَلَا تُجَوِّزُهَا عَلَى الْخِرْقَةِ.

وَالْحَاصِلُ أَنَّهُ لَا كَرَاهَةَ فِي السُّجُودِ عَلَى شَيْءٍ مِمَّا فُرِشَ عَلَى الْأَرْضِ مِمَّا لَا يَتَحَرَّكُ بِحَرَكَةِ الْمُصَلِّي بِالْإِجْمَاعِ إلَخْ. اهـ. وَلَكِنَّ الْأَفْضَلَ عِنْدَنَا السُّجُودُ عَلَى الْأَرْضِ أَوْ عَلَى مَا تُنْبِتُهُ كَمَا فِي نُورِ الْإِيضَاحِ وَمُنْيَةِ الْمُصَلِّي (قَوْلُهُ لِأَنَّهُ أَقْرَبُ لِلتَّوَاضُعِ) أَيْ لِقُرْبِهِ مِنْ الْأَرْضِ.


புதன், 6 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

வடகரை தாவூதி ஆலிம் பதில் 18

சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஊரில் நடைபெறவிருந்தது 

ஒரு மாபெரும் மார்க்க நிகழ்வு. 

அதில் கலந்து கொள்ள பயணம் செய்தனர் நான்கு பெரியவர்கள்.

செல்லும் வழியில் தொழுகைக்காக பிரதான சாலையில் உள்ள ஒரு பள்ளிவாசலை சென்றடைந்தனர்.

அப்போது அந்தப் பள்ளிவாசலில் ளுஹர் தொழுகை ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிருந்தது இவர்கள் தயாராகி ஜமாஅத்தில் சேரும்போது இரண்டு ரக்அத்துகள் முடிந்திருந்தது.

 மூன்றாம் ரக்அத்தில் இணைந்த இவர்களில் ஒருவர் (மட்டும்) இமாமுடனே சலாம் கொடுத்து தொழுகையை முடித்துவிட்டார்.

மற்ற மூன்று பேரும் நான்கு ரக்அத்துகள் நிறைவு செய்து தொழுகையை முடித்தனர்.

இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுதவரிடம் மற்றவர்கள், ஏன் இரண்டு ரக்அத்துகளிலே சலாம் கொடுத்து முடித்து விட்டீர்கள்? என்று கேட்டதற்கு பயணத்தில் (ளுஹர் போன்ற நான்கு ரக்அத் தொழுகைகளில்) இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழுது சுருக்கிக் கொள்ள அனுமதி உண்டுதானே அதுவும் நாம் சரியாக இரண்டு ரக்அத்துகள் முடிந்த பிறகு தான் வந்து சேர்ந்தோம் அதனால்தான் என்றார்.

அதற்கு அவர்கள் அப்படி இல்லீங்க ஜீ!

"ஒரு முஸாஃபிர் தனியாக தொழுதால் அல்லது முஸாஃபிரான இமாமைப் பின்பற்றி தொழுதால் தான் இரண்டு ரக்அத்துகளோடு சுருக்கிக் கொள்ள வேண்டும்.

முகீமாக உள்ள இமாம் நடத்தும் ஜமாஅத்தில் இணைந்து தொழுதால், கண்டிப்பாக நான்கு ரக்அத்துகள் தான் தொழ வேண்டும். நாம் ஆரம்பத்திலேயே இணைந்தாலும் நடுவில் இணைந்தாலும் கடைசி அத்தஹிய்யாத் அமர்வில் இணைந்தாலும் சட்டம் ஒன்றுதான்."

என்றனர்.

"சரி இப்போது நான் என்ன செய்ய வேண்டும்" என்று கேட்டார் அவர்.

"இமாமுடன் நீங்கள் தொழுத ஃபர்ள் (சலாம் கொடுத்த பிறகு பேசி விட்டதால்) ஃபஸாத் ஆகிவிட்டது எனவே புதிதாக தொழவேண்டும்.

ஆனால் ஒன்று புதிதாக (தனியாக) தொழும்போது இரண்டு ரக்அத்துகள் மட்டும் தொழவேண்டும்" என்றனர் அவர்கள் 

குறிப்பு:- ஷரீஅத் பார்வையில், (77 கிலோமீட்டர் அல்லது அதை விட அதிக தூரம்) பிரயாணம் செய்யும் ஒருவர், ஒரு ஊரில் சென்று 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வரும் வரை முஸாஃபிர் ஆவார். 

ஒரு ஊரை சென்றடைந்தது 15 நாட்கள் அல்லது அதைவிட அதிகமாக தங்கும் முடிவிற்கு வந்து விட்டவர் அல்லது பயணம் மேற்கொள்ளாமல் சொந்த ஊரிலேயே இருப்பவர் முகீம் ஆவார்.


حاشية الطحطاوي على مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 427):


"وإن اقتدى مسافر بمقيم" يصلي رباعية ولو في التشهد الأخير "في الوقت صح" اقتداؤه "وأتمها أربعا"


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 145):


(قَوْلُهُ: وَلَوْ اقْتَدَى مُسَافِرٌ بِمُقِيمٍ فِي الْوَقْتِ صَحَّ وَأَتَمَّ) ؛ لِأَنَّهُ يَتَغَيَّرُ فَرْضُهُ إلَى الْأَرْبَعِ لِلتَّبَعِيَّةِ كَمَا تَتَغَيَّرُ نِيَّةُ الْإِقَامَةِ لِاتِّصَالِ الْمُغَيَّرِ بِالسَّبَبِ، وَهُوَ الْوَقْتُ وَفَرْضُ الْمُسَافِرِ قَابِلٌ لِلتَّغَيُّرِ حَالَ قِيَامِ الْوَقْتِ كَنِيَّةِ الْإِقَامَةِ فِيهِ وَإِذَا كَانَ التَّغْيِيرُ لِضَرُورَةِ الِاقْتِدَاءِ فَلَوْ أَفْسَدَهُ صَلَّى رَكْعَتَيْنِ


வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

காட்டுப் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தனர் 

மூன்று சகோதரர்கள்.

அவர்களில் விபரமுள்ள ஒருவர் இமாமாக நிற்க ஜமாஅத்தாக தொழுதனர். 

முதல் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போது, "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" வுக்கு பதிலாக (தவறுதலாக) "அல்லாஹ் அக்பர்" என்று கூறிவிட்டார் தொழுகை நடத்தியவர். 

தொழுகை முடிந்த பிறகு "ஏன் ஸஜ்தா ஸஹ்வு செய்யவில்லை?" எனக் கேட்டார் மற்றொருவர்.

 தொழுகை நடத்தியவர், பின் வரும் விளக்கத்தை அளித்தார்.

"தொழுகையில் ஒரு வாஜிபை விட்டால் அல்லது ஒரு வாஜிபையோ ருக்னாக உள்ள காரியத்தையோ தாமதப்படுத்தினால் அல்லது ஒரு ருக்னை திரும்பவும் (இரண்டாம் தடவையாக) செய்து விட்டால் அல்லது ஒரு ருக்னை முன் பின்னாக செய்து விட்டால் அல்லது ஒரு வாஜிபின் தன்மையில் மாற்றம் செய்து விட்டால் அப்போது தான்

ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜாபாகும்.

தொழுகையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போது சொல்லப்டும் தக்பீர்கள் வாஜிபு அல்ல. மாறாக, சுன்னத் தான் எனவே ஒருவர் ருகூஃவிலிந்து தலையை உயர்த்தும் போது தவறுதலாக "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி விட்டால் (அல்லது ஒன்றுமே சொல்லாமல் விட்டாலும்) அதனால் ஸஜ்தா ஸஹ்வு செய்யனும் என்று அவசியமில்லை. 


"وَلَا يَجِبُ السُّجُودُ إلَّا بِتَرْكِ وَاجِبٍ أَوْ تَأْخِيرِهِ أَوْ تَأْخِيرِ رُكْنٍ أَوْ تَقْدِيمِهِ أَوْ تَكْرَارِهِ أَوْ تَغْيِيرِ وَاجِبٍ بِأَنْ يَجْهَرَ فِيمَا يُخَافَتُ، وَفِي الْحَقِيقَةِ وُجُوبُهُ بِشَيْءٍ وَاحِدٍ وَهُوَ تَرْكُ الْوَاجِبِ، كَذَا فِي الْكَافِي. وَلَا يَجِبُ بِتَرْكِ التَّعَوُّذِ وَالْبَسْمَلَةِ فِي الْأُولَى وَالثَّنَاءِ وَتَكْبِيرَاتِ الِانْتِقَالَاتِ". 


الفتاوى الهندية

(الْبَابُ الثَّانِي عَشَرَ فِي سُجُودِ السَّهْوِ، ١/ ١٢٦)

திங்கள், 4 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 16

தொழுகைக்காக பள்ளி வாசலுக்குள் வரும்போது (ஃபர்ள்) ஜமாஅத் நடைபெற்றுக் கொண்டிந்தால் சுன்னத் தொழவேண்டுமா? அல்லது ஜமாஅத்தில் இணைய வேண்டுமா? என்று கேள்வி கேட்டு மத்ரஸாவிற்கு தபால் அனுப்பி இருந்தார் வெளியூர் உதவியாளர் ஒருவர்.

அதற்கு, மத்ரஸாவின் முதல்வர் அனுப்பி வைத்த பதிலின் சுருக்கம் கீழே..

 (ஃபஜ்ரைத் தவிர்த்து) ளுஹர், அஸ்ர், இஷா ஆகிய வக்துகளில் ஃபர்ள் நடந்து கொண்டிருக்கும் போது அல்லது தொழுகைக்கு இகாமத் சொல்லப்படும் போது சுன்னத் தொழுகையை ஆரம்பிப்பது கூடாது.

ஒருவர் இகாமத் சொல்லப்படுவதற்கு சற்று முன்புதான் சுன்னத் தொழுகையை ஆரம்பித்தார் சிறிது நேரத்தில் இகாமத் சொல்லப்படுகிறது என்றால், அவர் (நான்கு ரக்அத்துகள் நிய்யத் செய்திருந்தாலும்) இரண்டு ரக்அத்துகளை மட்டும் விரைவாக தொழுது விட்டு ஜமாஅத்தில் இணைந்து கொள்ள வேண்டும்.


(நான்கு ரக்அத்துகள் சுன்னத் தொழுவதற்காக நிய்யத் செய்த(அ)வர் மூன்றாவது ரக்அத்துக்கு எழுந்த பிறகு தான் இகாமத் சொல்லப்பட்டது என்றால், நான்கு ரக்அத்துகளையும் நிறைவு செய்து விட்டுத் தான் ஜமாஅத்தில் இணைய வேண்டும்.

ஆனால் ஃபஜ்ர் தொழுகையில் மட்டும் சட்டம் வேறுபடும் அது வருமாறு 

இகாமத் சொல்லிக் கொண்டிருக்கும் போது வருபவர், அல்லது தொழுகை நடந்து கொண்டிருக்கும் போது வருபவர்கள் கூட கண்டிப்பாக சுன்னத் தொழுது விட்டுத்தான் ஜமாஅத் தொழுகையில் இணைய வேண்டும். (அந்தளவுக்கு ஃபஜ்ருடைய சுன்னத் வலியுறுத்தப்பட்டுள்ளது) ஆனால், சுன்னத் தொழுகையை ஆரம்பித்து நாம் அதை முடிக்கும் முன்பே இமாம் சலாம் கொடுத்து விடுவார் என்ற அச்சம் இருந்தால் அப்போது (மட்டும்) சுன்னத் தொழாமலே ஜமாஅத் தொழுகையில் இணைந்து கொள்ள வேண்டும்.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 377)

''(وكذا يكره تطوع عند إقامة صلاة مكتوبة) أي إقامة إمام مذهبه ؛ لحديث: «إذا أقيمت الصلاة فلا صلاة إلا المكتوبة» (إلا سنة فجر إن لم يخف فوت جماعتها) ولو بإدراك تشهدها، فإن خاف تركها أصلاً۔


(قوله: إلا سنة فجر)؛ لما روى الطحاوي وغيره عن ابن مسعود: أنه دخل المسجد وأقيمت الصلاة فصلى ركعتي الفجر في المسجد إلى أسطوانة، وذلك بمحضر حذيفة وأبي موسى، ومثله عن عمر وأبي الدرداء وابن عباس وابن عمر، كما أسنده الحافظ الطحاوي في شرح الآثار، ومثله عن الحسن ومسروق والشعبي شرح المنية.

(قوله: ولو بإدراك تشهدها) مشى في هذا على ما اعتمده المصنف والشرنبلالي تبعاً للبحر، لكن ضعفه في النهر، واختار ظاهر المذهب من أنه لا يصلي السنة إلا إذا علم أنه يدرك ركعة، وسيأتي في باب إدراك الفريضة، ح. قلت: وسنذكر هناك تقوية ما اعتمده المصنف عن ابن الهمام وغيره''.


مصنف عبد الرزاق الصنعاني (2/ 437)

'' عن ابن جريج، عن عطاء قال: «إذا أقيمت الصلاة فلا صلاة، فإن خرج الإمام وأنت راكع، فاركع إليها ركعةً أخرى خفيفةً، ثم سلم»''


வடகரை தாவூதி ஆலிம் பதில் 15


வடகரை தாவூதி ஆலிம் பதில் 15

தஹஜ்ஜுத்" தொழுககையை அனுதினமும்  தவறாமல் நிறைவேற்றும் பெரியவர் அவர்.

அன்றொரு நாள் வெளியூர் சென்று வந்ததால், நீண்ட நேரம் தூக்கம் கெட்டு  தாமதமாகத் தான் கண் விழித்தார் அவசரமாக தேவைகளை முடித்து தஹஜ்ஜுத் தொழ நின்றார். 

ஒரு ரக்அத் தான் நிறைவு செய்திருப்பார் அதற்குள் ஃபஜ்ர் பாங்கு சப்தம் கேட்டது தொடர்ந்து தொழுது முடித்தவருக்கு இது கூடுமா? கூடாதா? என்று சந்தேகம் ஏற்பட்டது. 

காரணம்; "ஃபஜ்ர் வக்த் வந்த பின், ஃபஜ்ருடைய சுன்னத் (இரண்டு ரக்அத்துகள்) தவிர வேறு நஃபில் தொழுகை தொழுவது தடுக்கப்பட்டதாகும்" என்பதை சில தினங்களுக்கு முன்னர் தான்   ஒரு பயானில்  ஹஜ்ரத் சொல்லக் கேட்டிருந்தார். 

ஆகவே, ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின்பும்  தஹஜ்ஜுத் தொழுகையை தொடர்ந்து தொழுது முடித்தது சரிதானா? என்று தெளிவு பெற இமாமை அணுகி, தனக்கு ஏற்பட்ட சந்தேகத்தை விவரித்தார்.

இமாம் கூறிய பதில் வருமாறு,

ஆம்! ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் ஃபஜ்ருடைய சுன்னத் இரண்டு ரக்அத்துகள் தவிர வேறு எந்த வகையான நஃபில் தொழுகையும் (ஆரம்பித்து) தொழுவது (ஹதீஸில்) தடுக்கப்பட்டதாகும். எனவே அப்படித் தொழுவது மக்ரூஹ்.

ஆயினும் நீங்கள் செய்ததைப் போன்று ஃபஜ்ர் வக்துக்கு முன்பே (தஹஜ்ஜுத் வேளையில்) துவங்கி விட்ட நஃபில் தொழுகையை  ஃபஜ்ர் வக்து வந்த பின்  தொடர்(ந்து நிறைவு செய்)வது அப்படி மக்ரூஹ் அல்ல. 

அதே சமயம் தினமும் ஸஹ்ரின் கடைசி நேரத்தில் தஹஜ்ஜுத் தொழுகையை ஆரம்பித்து ஃபஜ்ர் பாங்கு சொல்லிய பின் நிறைவு செய்யும் இந்த முறையை வழமையாக்கிக் கொள்வது நல்லது இல்லை.

 ஏனென்றால் அது முழுமையான தஹஜ்ஜுத் தொழுகையாக ஆகாது.


قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ 


(حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) 

قال صلی اللہ علیہ وسلم إن اللہ زادکم صلاة ألا وہی الوتر فصلوہا ما بین العشاء الاخیرة إلی طلوع الفجر حاشیة طحطاوی علی المراقی ۔ ویکرہ التنفل بعد طلوع الفجر باکثر من سنتہ قبل اداء الفرض لقولہ علیہ الصلاة والسلام لیبلغ شاهدکم غائبکم ألا لا صلاة بعد الصبح إلا رکعتین الحدیث ۔ قولہ بعد طلوع الفجر أي قصداً حتی لو شرع فی النفل قبل طلوع الفجر ثم طلع الفجر فلا صح انہ لا یقوم عن سنة الفجر ولا یقطعہ لان الشروع فیہ کان لا عن قصد۔ (حاشیة الطحاوی علی المراقی، ص: ۱۸۸) ۔


ஞாயிறு, 3 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 14

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 14

வாரம் ஒருமுறை மக்களுக்குத் தேவையான ஃபிக்ஹ் சட்டங்களை விளக்கித் தருவார் அந்த இமாம்.

அதன் படி அன்றும் சுப்ஹ் தொழுகை முடிந்ததும் மக்களை நோக்கி அமர்ந்த  இமாம்,

இன்று தொழுகை தொடர்பான ஒரு முக்கியமான சட்டத்தை உங்களுக்கு விளக்கப்போகிறேன் எல்லோரும் அமர்ந்து கவனமாகக் கேளுங்கள்!

என்று கூறி  ஆரம்பித்தார்.

இமாம், (முதல்) அத்தஹிய்யாத் அமர்வில் இருக்கும் போது, ஒருவர் வந்து தொழுகையில் இணைந்து (உட்கார்ந்து) கொண்டார் என்று வைத்துக் கொள்ளுங்கள்!;

வந்து இணைந்தவர், அத்தஹிய்யாத் ஓதி முடிக்கவில்லை, அதற்குள் இமாம் அடுத்த ரக்அத்துக்கு எழுந்து விட்டார்  என்றால் இமாமுடனேயே இவரும் (அத்தஹிய்யாத்தை ஓதி முடிக்காமலே) எழுந்து நின்று கொள்வது அதிகம் நடக்கிறது இப்படிச் செய்வது (வாஜிபை விட்ட குற்றமாகும்) கூடாது. 

மாறாக சற்று விரைவாக அத்தஹிய்யாத் ஓதி முடித்து விட்டுத்தான் எழுந்து, இமாமுடன் இணைந்து கொள்ள வேண்டும் என்பது சட்டம்.

இமாம் கடைசி அமர்வில் இருக்கும் போது, கடைசியாக வந்து இணைந்தவரும் இப்படித்தான் (அத்தஹிய்யாத் ஓதி முடியாவிட்டாலும் இமாம் ஸலாம் கொடுத்த உடனேயே மீதி தொழுகையை நிறைவேற்ற எழுந்து விடுகிறார்கள் இதுவும் தவறாகும் கூடாது.


மாறாக இமாம் ஸலாம் கொடுத்த பின் உடனே எழுந்து விடாமல் அத்தஹிய்யாத்தை முடித்து விட்டுத்தான் மீதமுள்ள ரக்அத்தை நிறைவு செய்ய எழுந்திருக்க வேண்டும் என்பது சட்டம்.


ஆனால் மேல் சொன்ன சட்டத்திற்கு மாறாக (அத்தஹிய்யாத் ஓதி முடிக்காமலே) ஒருவர் எழுந்து விட்டார் என்றால் (அது தவறு தான் ஆனாலும்) அவர் ஸஜ்தா ஸஹ்வு செய்வதோ அல்லது திரும்ப தொழுக வேண்டும் என்பதோ கிடையாது.


ஏனென்றால் இவர்  இமாமைப் பின் பற்றி தொழும் "முக்ததீ" ஆவார்; முக்ததீயிடம் தவறு ஏற்பட்டால் அதற்காக ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டும் என்பதோ அல்லது திரும்ப தொழுக வேண்டும் என்பதோ கிடையாது.


என்று அழுத்தம் திருத்தமாக விளக்கி முடித்தார் இமாம்.


அட இவ்வளவு நாளா இது தெரியாம போச்சே...! என்று அனேகம் பேர் பேசிக்கொண்டு கலைந்து சென்றனர்.


الفتاوى الهندية (1/ 90):


"إذا أدرك الإمام في التشهد وقام الإمام قبل أن يتم المقتدي أو سلم الإمام في آخر الصلاة قبل أن يتم المقتدي التشهد فالمختار أن يتم التشهد. كذا في الغياثية وإن لم يتم أجزأه"



الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 470):


"والحاصل أن متابعة الإمام في الفرائض والواجبات من غير تأخير واجبة، فإن عارضها واجب لا ينبغي أن يفوته بل يأتي به ثم يتابع، كما لو قام الإمام قبل أن يتم المقتدي التشهد فإنه يتمه ثم يقوم لأن الإتيان به لا يفوت المتابعة بالكلية، وإنما يؤخرها، والمتابعة مع قطعه تفوته بالكلية، فكان تأخير أحد الواجبين مع الإتيان بهما أولى من ترك أحدهما بالكلية، بخلاف ما إذا عارضها سنة كما لو رفع الإمام قبل تسبيح المقتدي ثلاثا فالأصح أنه يتابعه لأن ترك السنة أولى من تأخير الواجب اهـ 



الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1/ 496):


"(بخلاف سلامه) أو قيامه لثالثة (قبل تمام المؤتم التشهد) فإنه لا يتابعه بل يتمه لوجوبه، ولو لم يتم جاز؛ ولو سلم والمؤتم في أدعية التشهد تابعه لأنه سنة والناس عنه غافلون.


 (قوله: فإنه لا يتابعه إلخ) أي ولو خاف أن تفوته الركعة الثالثة مع الإمام كما صرح به في الظهيرية، وشمل بإطلاقه ما لو اقتدى به في أثناء التشهد الأول أو الأخير، فحين قعد قام إمامه أو سلم، ومقتضاه أنه يتم التشهد ثم يقوم ولم أره صريحا، ثم رأيته في الذخيرة ناقلا عن أبي الليث: المختار عندي أنه يتم التشهد وإن لم يفعل أجزأه اهـ ولله الحمد (قوله: لوجوبه) أي لوجوب التشهد كما في الخانية وغيرها، ومقتضاه سقوط وجوب المتابعة كما سنذكره وإلا لم ينتج المطلوب فافهم (قوله ولو لم يتم جاز) أي صح مع كراهة التحريم كما أفاده ح، ونازعه ط والرحمتي، وهو مفاد ما في شرح المنية حيث قال: والحاصل أن متابعة الإمام في الفرائض والواجبات من غير تأخير واجبة فإن عارضها واجب لا ينبغي أن يفوته بل يأتي به ثم يتابعه لأن الإتيان به لا يفوت المتابعة بالكلية وإنما يؤخرها، والمتابعة مع قطعه تفوته بالكلية، فكان تأخير أحد الواجبين مع الإتيان بهما أولى من ترك أحدهما بالكلية، بخلاف ما إذا عارضتها سنة لأن ترك السنة أولى من تأخير الواجب. اهـ.

வெள்ளி, 1 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

வடகரை தாவூதி ஆலிம் பதில் 13

சவூதியில் உள்ள  நிறுவனம் ஒன்றில் வேலை செய்யும் இளைஞர் அவர்.

 வெள்ளிக் கிழமை விடுமுறை என்பதால் உடல் நலம் பாதிக்கப்பட்ட, நண்பர் ஒருவரை நலம் விசாரித்து விட்டு, ஜுமுஆ தொழுகைக்கு சென்றிருக்கிறார்.

 இவர் போய்ச் சேரும் போது இமாம் (அத்தஹிய்யாத்) அமர்வில் இருந்தார் அவசரமாக அவர் தக்பீர் தஹ்ரீமா கூறி ஜமாஅத்தில் இணைந்து கொண்டார். 

இமாம் ஸலாம் கொடுத்த பின் எழுந்து இரண்டு ரக்அத்துகளை நிறைவு செய்திருக்கிறார்.

அருகில் தொழுத வெளிநாட்டவர் நீ (இமாமுடன் ஒரு ரக்அத்தைக் கூட அடையாததால்) நான்கு ரக்அத்துகள் லுஹராக தொழுதிருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

அதைக் கேட்டு குழம்பிய அவர் ஊரில் உள்ள நெருங்கிய ஆலிம் நண்பருக்கு போனில் தொடர்பு கொண்டு நடந்த விபரத்தை கூறினார்.

அதற்கு அந்த ஆலிம்,

நீங்கள் தொழுத இரண்டு ரக்அத்துகள் (ஜுமுஆ) கூடிவிடும்.

ஹனஃபீ மத்ஹபு சட்டப்படி அது சரிதான். 

மற்ற மூன்று மத்ஹபுகளிலும் ஜுமுஆவில் இமாமுடன் ஒரு ரக்அத்தையாவது பெற்றிருப்பவர் தான் மீதமுள்ள ஒரு ரக்அத்தை பூர்த்தி செய்து ஜுமுஆவாக தொழ முடியும்.

இமாமுடன் ஒரு ரக்அத்தைக்கூட அடையாத நிலையில் (இமாம் இரண்டாம் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து எழுந்த பின்) இணைந்தவர்கள் நான்கு ரக்அத்துகள் (லுஹராக) நிறைவு செய்ய வேண்டும் என்று சட்டம் உள்ளது.

உங்கள் அருகில் தொழுதவர் வேறு மத்ஹபு சட்டத்தின் படி தொழுபவராக இருந்திருப்பார் என்று விளக்கமளித்தார்.


تبيين الحقائق شرح كنز الدقائق وحاشية الشلبي (1 / 222):

وَمَنْ أَدْرَكَهَا فِي التَّشَهُّدِ أَوْ فِي سُجُودِ السَّهْوِ أَتَمَّ جُمُعَةً


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 199):

"ومن أدركها" أي الجمعة "في التشهد أو" في "سجود السهو" وتشهده "أتم جمعة" لما رويناه: "وما فاتكم فاقضوا