செவ்வாய், 9 பிப்ரவரி, 2016

விதைக்கபட்டதே அறுக்கப்படும்


விதைக்கபட்டதே அறுக்கப்படும்

فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ (7) وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ  [الزلزلة: 8]
عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبِرُّ لَا يَبْلَى، وَالْإِثْمُ لَا يُنْسَى، وَالدَّيَّانُ لَا يَمُوتُ، فَكُنْ كَمَا شِئْتَ كَمَا تَدِينُ تُدَانُ جامع معمر بن راشد
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
நம் செயல்களுக்கு தகுந்த விளைவுகள் இவ்வுலகில் அல்லது மறுவுலகில் நிச்சயம் ஏற்படும் என்ற நம்பிக்கை முஸ்லிம்கள் அனைவரிடமும் இருக்கும்.

நல்ல செயல்களாக இருந்தால் நல்ல விளைவுகளும் தீய செயல்களாக இருந்தால் தீய விளைவுகளும்  ஏற்படும் என்றும் நம்ப வேண்டியவர்கள் நாம். நம்பவும் செய்கிறோம்.

هَلْ جَزَاءُ الْإِحْسَانِ إِلَّا الْإِحْسَانُ الرحمن: 60
 وَالَّذِينَ كَسَبُوا السَّيِّئَاتِ جَزَاءُ سَيِّئَةٍ بِمِثْلِهَا يونس: 27
ஆனால் குர்ஆன்و ஹதீஸ் வழியிலும் முன்னோர்கள், நல்லோர்கள் மொழியிலும் ஆராயும்போது, பல நேரங்களில் நாம் செய்யும் செயலின் அதே வகையில் நாம் விளைவுகளை அணுபவிக்க நேரும் என்ற உண்மையை அறியலாம்.
இதை உறுதி படுத்தும் குர்ஆன் வசனங்கள்
وَأَوْفُوا بِعَهْدِي أُوفِ بِعَهْدِكُمْ وَإِيَّايَ فَارْهَبُونِ [البقرة: 40]
فَاذْكُرُونِي أَذْكُرْكُمْ  البقرة: 152
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِنْ تَنْصُرُوا اللَّهَ يَنْصُرْكُمْ [محمد: 7]
وَلْيَعْفُوا وَلْيَصْفَحُوا أَلَا تُحِبُّونَ أَنْ يَغْفِرَ اللَّهُ لَكُمْ وَاللَّهُ غَفُورٌ رَحِيمٌ  النور: 22
இதை உறுதி படுத்தும் நபி மொழிகள்
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ سَتَرَ مُسْلِمًا سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ» سنن ابن ماجه
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الرَّاحِمُونَ يَرْحَمُهُمُ الرَّحْمَنُ، ارْحَمُوا مَنْ فِي الأَرْضِ يَرْحَمْكُمْ مَنْ فِي السَّمَاءِ، الرَّحِمُ شُجْنَةٌ مِنَ الرَّحْمَنِ، فَمَنْ وَصَلَهَا وَصَلَهُ اللَّهُ وَمَنْ قَطَعَهَا قَطَعَهُ اللَّهُ» سنن الترمذي
عَنْ زِيَادِ بْنِ عِلَاقَةَ قَالَ: سَمِعْتُ جَرِيرًا يَقُولُ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: " مَنْ لَا يَرْحَمْ لَا يُرْحَمْ، وَمَنْ لَا يَغْفِرْ لَا يُغْفَرْ لَهُ " مسند أحمد 
நன்மையின் பலன் நன்மையே
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا أَكْرَمَ شَابٌّ شَيْخًا لِسِنِّهِ إِلَّا قَيَّضَ اللَّهُ لَهُ مَنْ يُكْرِمُهُ عِنْدَ سِنِّهِ» سنن الترمذي
عَنْ أَبِي قِلَابَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «الْبِرُّ لَا يَبْلَى، وَالْإِثْمُ لَا يُنْسَى، وَالدَّيَّانُ لَا يَمُوتُ، فَكُنْ كَمَا شِئْتَ كَمَا تَدِينُ تُدَانُ جامع معمر بن راشد

1269 عَنِ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا: أَنَّ عَبْدَ اللَّهِ بْنَ أُبَيٍّ لَمَّا تُوُفِّيَ، جَاءَ ابْنُهُ إِلَى النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ: يَا رَسُولَ اللَّهِ، أَعْطِنِي قَمِيصَكَ أُكَفِّنْهُ فِيهِ، وَصَلِّ عَلَيْهِ، وَاسْتَغْفِرْ لَهُ، فَأَعْطَاهُ النَّبِيُّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَمِيصَهُ، فَقَالَ: «آذِنِّي أُصَلِّي عَلَيْهِ» ، فَآذَنَهُ، فَلَمَّا أَرَادَ أَنْ يُصَلِّيَ عَلَيْهِ جَذَبَهُ عُمَرُ رَضِيَ اللَّهُ عَنْهُ، فَقَالَ: أَلَيْسَ اللَّهُ نَهَاكَ أَنْ تُصَلِّيَ عَلَى المُنَافِقِينَ؟ فَقَالَ: " أَنَا بَيْنَ خِيَرَتَيْنِ، قَالَ: {اسْتَغْفِرْ لَهُمْ أَوْ لاَ تَسْتَغْفِرْ لَهُمْ إِنْ تَسْتَغْفِرْ لَهُمْ سَبْعِينَ مَرَّةً، فَلَنْ يَغْفِرَ اللَّهُ لَهُمْ} [التوبة: 80] " فَصَلَّى عَلَيْهِ، فَنَزَلَتْ: {وَلاَ تُصَلِّ عَلَى أَحَدٍ مِنْهُمْ مَاتَ أَبَدًا، وَلاَ تَقُمْ عَلَى قَبْرِهِ} [التوبة: 84] صحيح البخاري
         இப்னு உமர்(ரலி) அறிவித்தார்.  (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் இப்னு உபை இறந்துவிட்டான். அப்போது அவனுடைய (முஸ்லிமான) மகன், நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! உங்கள் சட்டையைத் தாருங்கள். அவரை அதில் கஃபன் செய்யவேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது. அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்கவேண்டும்" என்று கூறினார். உடனே நபி(ஸல்) அவர்கள் தங்களின் சட்டையை அவருக்குக் கொடுத்துவிட்டு, '(ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுகை நடத்துவேன்" என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி(ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர்(ரலி) நபி(ஸல்) அவர்களை இழுத்து, 'நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக்கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா?' எனக் கேட்டதற்கு நபி(ஸல்) அவர்கள் '(ஜனாஸாத் தொழுவது, தொழமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்ததெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது' எனக் கூறிவிட்டு, 'நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை" என்ற (திருக்குர்ஆன் 09:80) வசனத்தை ஓதிக்காட்டிவிட்டு ஜனாஸாத் தொழுதார்கள். உடனே 'அ(ந்நய)வ(ஞ்சக)ர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸாத்) தொழ வேண்டாம்" என்ற (திருக்குர்ஆன் 09:84) வசனம் அருளப்பட்டது. ஸஹீஹுல் புஹாரீ1269
தீமையின் விளைவு தீமை
رُوِيَ أَنَّهُ لَمَّا نَزَلَتْ سُورَةُ الرَّحْمَنِ عَلَّمَ القرآن قَالَ عَلَيْهِ السَّلَامُ لِأَصْحَابِهِ مَنْ يَقْرَؤُهَا مِنْكُمْ عَلَى رُؤَسَاءِ قُرَيْشٍ، فَتَثَاقَلُوا مَخَافَةَ أَذِيَّتِهِمْ، فَقَامَ ابْنُ مَسْعُودٍ وَقَالَ: أَنَا يَا رَسُولَ اللَّهِ، فَأَجْلَسَهُ عَلَيْهِ السَّلَامُ، ثُمَّ قَالَ: مَنْ يَقْرَؤُهَا عَلَيْهِمْ فَلَمْ يَقُمْ إِلَّا ابْنُ مَسْعُودٍ، ثُمَّ ثَالِثًا كَذَلِكَ إِلَى أَنَّ أَذِنَ لَهُ، وَكَانَ عَلَيْهِ السَّلَامُ يُبْقِي عَلَيْهِ لِمَا كَانَ يَعْلَمُ مِنْ ضَعْفِهِ وَصِغَرِ/ جُثَّتِهِ، ثُمَّ إِنَّهُ وَصَلَ إِلَيْهِمْ فَرَآهُمْ مُجْتَمِعِينَ حَوْلَ الْكَعْبَةِ، فَافْتَتَحَ قِرَاءَةَ السُّورَةِ، فَقَامَ أَبُو جَهْلٍ فَلَطَمَهُ فَشَقَّ أُذُنَهُ وَأَدْمَاهُ، فَانْصَرَفَ وَعَيْنَاهُ تَدْمَعُ، فَلَمَّا رَآهُ النَّبِيُّ عَلَيْهِ السَّلَامُ رَقَّ قَلْبُهُ وَأَطْرَقَ رَأْسَهُ مَغْمُومًا، فَإِذَا جِبْرِيلُ عَلَيْهِ السَّلَامُ يَجِيءُ ضَاحِكًا مُسْتَبْشِرًا، فَقَالَ: يَا جِبْرِيلُ تَضْحَكُ وَابْنُ مَسْعُودٍ يَبْكِي! فَقَالَ: سَتَعْلَمُ، فَلَمَّا ظَهَرَ الْمُسْلِمُونَ يَوْمَ بَدْرٍ الْتَمَسَ ابْنُ مَسْعُودٍ أَنْ يَكُونَ لَهُ حَظٌّ فِي الْمُجَاهِدِينَ، فَأَخَذَ يُطَالِعُ الْقَتْلَى فَإِذَا أَبُو جَهْلٍ مَصْرُوعٌ يَخُورُ، فَخَافَ أَنَّ تَكُونَ بِهِ قُوَّةٌ فَيُؤْذِيَهُ فَوَضَعَ الرُّمْحَ عَلَى مِنْخَرِهِ مِنْ بعيد طَعَنَهُ، وَلَعَلَّ هَذَا مَعْنَى قَوْلِهِ: سَنَسِمُهُ عَلَى الْخُرْطُومِ ثُمَّ لَمَّا عَرَفَ عَجْزَهُ وَلَمْ يَقْدِرْ أَنْ يَصْعَدَ عَلَى صَدْرِهِ لِضَعْفِهِ فَارْتَقَى إِلَيْهِ بِحِيلَةٍ، فَلَمَّا رَآهُ أَبُو جَهْلٍ قَالَ: يَا رُوَيْعِيَّ الْغَنَمِ لَقَدِ ارْتَقَيْتَ مُرْتَقًى صَعْبًا، فَقَالَ ابْنُ مَسْعُودٍ:
الْإِسْلَامُ يَعْلُو وَلَا يُعْلَى عَلَيْهِ، فَقَالَ أَبُو جَهْلٍ: بَلِّغْ صَاحِبَكَ أَنَّهُ لَمْ يَكُنْ أَحَدٌ أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فِي حَيَاتِي ولا أحد أَبْغَضَ إِلَيَّ مِنْهُ فِي حَالِ مَمَاتِي، فَرُوِيَ أَنَّهُ عَلَيْهِ السَّلَامُ لَمَّا سَمِعَ ذَلِكَ قَالَ: «فِرْعَوْنِي أَشَدُّ مِنْ فِرْعَوْنِ مُوسَى فَإِنَّهُ قَالَ آمَنْتُ [يونس: 90] وَهُوَ قَدْ زَادَ عُتُوًّا» ثُمَّ قَالَ لِابْنِ مَسْعُودٍ: اقْطَعْ رَأْسِي بِسَيْفِي هَذَا لِأَنَّهُ أَحَدُّ وَأَقْطَعُ، فَلَمَّا قَطَعَ رَأْسَهُ لَمْ يَقْدِرْ عَلَى حَمْلِهِ، تفسير الرازي = مفاتيح الغيب أو التفسير الكبير

இளம் தம்பதியினர் தங்களுடைய வயது முதிர்ந்த பெற்றோருக்கு உணவு அளிப்பதற்காக பழைய மண் பாண்டங்களையே உபயோகித்து வந்தனர்.
இதனை கவனித்து வந்த அந்த தம்பதியினரின் மகன், பாட்டன், பாட்டி மரணத்திற்குப் பின் அதை எடுத்து பத்திரப்படுத்தினான். காணமல் போன பாத்திரத்தை தேடிய தம்பதியினர். தங்கள் மகனிடமும் விசாரித்தனர் அதற்கு அந்தச்சிறுவன் அந்த மண் பாத்திரங்களை நான் எடுத்து பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன் ஏனென்றால் நீங்கள் வயதான போது உங்களுக்கு சோறு போடுவதற்கு அது தேவைப்படும் அல்லவா! என்றான்.
v முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் என்று கூறுவது இதைத்தான்.

பாதிப்புக்குள்ளாகுபவர்களைப் பார்த்து என்ன அநியாயம் செய்தானோ இப்படி அணுபவிக்கிறான் என்று கூறுவதற்காக இதை குறிப்பிடவில்லை
மாறாக, தீமைகளில் சிக்கும்போது அதாவது பிறருக்கு துரோகம் செய்யும் போது, துண்புறுத்த எண்ணும் போது, திண்டாட விட்டு ரசிக்கும் போது, சிக்கலில் மாட்டி விடும் போது, நாமாகவே அச்சம் கொள்ள வேண்டும் இதே நிலை நாளை நமக்கும் ஏற்படுமே என நம் மனசாட்சி உறுத்த வேண்டும்.

நன்மைகளை சம்பாதித்துக்கொள்ள நிறைய சந்தர்ப்பங்களை உருவாக்கிக்கொள்வதற்கும் இந்த சிந்தனை உதவும்.
மக்களிடம் மிகைத்து நிற்கும் ஒரு மோசமான மனோநிலையை காட்சி படுத்திய ஒரு கார்ட்டூன் காணொளியை பார்க்க நேர்ந்தது.
அதில் ஒருவன் வீட்டின் பால்கனி பகுதியில் தடுமாறி கீழேவிழும் அபாயநிலையில் தன்னை காப்பாற்ற உதவி கேட்டு அலறிக் கொண்டிருக்கிறான் அவனுக்கு உதவிடும் நிலையில் இருக்கும் இன்னொரு வீட்டுக்காரன் உதவாமல் ஆபத்தான இந்த காட்சியை கேமராவுக்குள் பதிவு செய்து கொண்டிருக்கிறான். ஆபத்தான நிலையிலிருந்தவன் மிக சீக்கிரமாகவே சுதாரிப்புடன் தப்பிப்பது கண்டு வியந்து படம் பிடித்துக்கொண்டிருந்த அவன் சற்று பின்னால் செல்லச் செல்ல அவன் வீட்டிலிருந்து தடுமாறி கீழே விழும் அபாயத்தில் உதவி கேட்கிறான் அப்போது அதை முப்பதுக்கும் மேற்பட்ட அடுத்த வீட்டுக்காரர்கள் படம் பிடித்துக்கொண்டிருந்தனர்.

சிந்திக்க வைக்கும் சிறுகதை
காட்டு அரசனாகிய சிங்கம் ஒன்று திடீரென்று நோய் வாய்ப்பட்டது. அதனால் வேட்டைக்குச் செல்லாமல் குகையிலேயே படுத்து இருந்தது.
இதை அறிந்த காட்டு விலங்குகள் அனைத்தும் குகைக்கு வந்தன. சிங்கத்தைப் பார்த்து விசாரித்து விட்டுச் சென்றன. ஆனால் நரி மட்டும் அங்கு வரவே இல்லை.
சிங்கத்தின் அருகில் இருந்து ஓநாய் ஒன்று நரி வரவில்லை என்பதை அறிந்தது. தன் பகைவனாகிய நரியைப் பழிவாங்க நல்ல வாய்ப்புக் கிடைத்தது என்று மகிழ்ந்தது.
சிங்கத்தைப் பணிவாக வணங்கிய அது 'அரசே யானை, புலி, சிறுத்தை போன்ற விலங்குகள் எல்லாம் இங்கே வந்து உங்களை விசாரித்து விட்டுச் சென் றுள்ளன.
ஆனால் ஒரேயொரு விலங்கு மட்டும் இங்கு வரவில்லை' என்றது.
இதைக்கேட்ட சிங்கம் 'இந்தக் காட்டில் என்னை மதிக்காத விலங்கு உள்ளதா? அது எது என்று சொல். இப்பொழுதே கொன்று ஒழிக்கிறேன்.' என்று கோபத்துடன் கரஜனை செய்தது.
'அரசே நரிதான் இத்தனை நாட்களில் ஒரு முறை கூட உங்களை வந்து பார்க்கவில்லை'
'என்னையே அவமதிக்கும் துணிவு அந்த நரிக்கு வந்து விட்டதா? எங்கே இருந்தாலும் அதை இங்கே இழுத்து வாருங்கள்' என்ற கட்டளை இட்டது சிங்கம்.
செய்தி அறிந்த நரி நடுங்கியபடியே குகைக்குள் நுழைத்தது. சிங்கத்தைப் பணிவாக வணங்கியது.
'நரியே உனக்கு என்ன திமிர்? ஒருமுறை கூட நீ இங்கு வந்து என்னைப் பார்க்கவில்லையே. நான் அழைத்த பிறகே வருகிறாய். அவ்வளவு பெரியவனாகிவிட்டாயா? உன் ஆணவத்திற்கு என்ன தண்டனை தெரியுமா' என்று கோபத்துடன் கேட்டது சிங்கம். அருகில் இருந்த ஓநாயோ நரிக்குக் கிடைக்கப் போகும் தண்ட னையை எண்ணிச் சிரித்தபடி நின்றது.
இந்த ஓநாய்தான் சிங்கத்திடம் தன்னைப் பற்றிக் கோள் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் சிங்கம் இப்படிக் கோபப்படுகிறது என்ற உண்மை நரிக்குப் புரிந்தது. ஓநாயைப் பழிக்குப் பழி வாங்க நினைத்தது.
சிங்கத்தைப் பார்த்து அது 'அரசே உங்கள் நலத்தையே எப்பொழுதும் நாடும் அடிமை நான். நீங்கள் நோய்வாய்ப்பட்டதை அறிந்தேன். அதற்குத் தகுந்த மருந்து தேடிப் பல இடங்களில் அலைந்தேன். அதனால்தான் நான் உங்களைச் சந்திக்க வரவில்லை.
முனிவர் ஒருவரை நேற்றுச் சந்தித் தேன். உங்கள் நோய் தீர நல்ல மருத்துவமொன்றை அவர் சொன்னார். அந்த மருத்துவ முறையை நீங்கள் மேற்கொண்டால் நோய் ஒரே வாரத்தில் பறந்துவிடும். நீங்கள் பழைய வலிமையைப் பெறுவீர்கள். அதைச் சொல்லத்தான் இங்கு ஓடோடி வந்தேன்' என்றது.
'நரியே! என் நலத்தில் நீ உண்மையான அக்கறை கொண்டுள்ளாய். உன் னைப்பற்றித் தவறாக நினைத்ததற்கு வருந்துகிறேன். முனிவர் சொன்ன மருத்துவம் என்ன? உடனே சொல்' என்று ஆர்வத்துடன் கேட்டது சிங்கம்.
'அரசே ஓநாயின் தோலை நீங்கள் ஒருவாரம் போர்த்திக் கொண்டி ருந்தால் போதும். உங்கள் நோய் குணமாகும். என்றார் அந்த முனிவர்' என்றது நரி.
இதைக் கேட்டு நடுநடுங்கியது ஓநாய். 'அரசே! என்னைப் கொன்று விடாதீர்கள்' என்று அங்கிருந்து ஓட முயற்சி செய்தது.
அங்கிருந்த நரி, 'அரசே உங்கள் நோய் குணமாவது இந்த ஓநாய்க்குப் பிடிக்கவில்லை. தப்பித்து ஓட முய ற்சி செய்கிறது பாருங்கள்" என்றது.
உடனே சிங்கம் அந்த ஓநாயின் மீது பாய்ந்து அதைக் கொன்று வீழ்த்தியது.

v வினை விதைத்தவன் வினை அறுப்பான்
திணை விதைத்தவன் திணை அறுப்பான்
v ஆயுதம் எடுத்தவன் ஆயுதத்தாலே அழிவான்
v கெடுவான் கேடு நினைப்பான்
போன்ற பழமொழிகளெல்லாம் நமக்கு அதைத்தான் உணர்த்துகின்றன.

ஞாயிறு, 31 ஜனவரி, 2016

அவசியமான ஒப்பீடும் அனாவசியமான ஒப்பீடும்


                   அவசியமான ஒப்பீடும்
                                  அனாவசியமான ஒப்பீடும்

وَرَفَعْنَا بَعْضَهُمْ فَوْقَ بَعْضٍ دَرَجَاتٍ لِيَتَّخِذَ بَعْضُهُمْ بَعْضًا سُخْرِيًّا وَرَحْمَتُ رَبِّكَ خَيْرٌ مِمَّا يَجْمَعُونَ [الزخرف: 32]
  عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»صحيح البخاري

மனிதர்களாகிய நாம் அல்லாஹ்வின் அடிமைகள் என்பதில் சமம் என்றாலும் ஒவ்வொருவரின் வாழ்க்கை நிலைகளை கவனிக்கும்போது ஏற்றத்தாழ்வை காணுகிறோம்.
நம்மில் பலருக்கும் இது உறுத்தலாக இருப்பதுண்டு ஆனால் அது தேவையில்லாதது.
ஏனெனில் இது அல்லாஹ்வின் வழிமுறையாக இருந்து வருகிறது
[وَاللَّهُ يَقْبِضُ وَيَبْسُطُ [البقرة: 245
மற்ற படைப்பினங்களைவிட மனிதனை மேன்மை படுத்தி இருப்பதை நாம் அறிவோம்.
وَلَقَدْ كَرَّمْنَا بَنِي آدَمَ وَحَمَلْنَاهُمْ فِي الْبَرِّ وَالْبَحْرِ وَرَزَقْنَاهُمْ مِنَ الطَّيِّبَاتِ وَفَضَّلْنَاهُمْ عَلَى كَثِيرٍ مِمَّنْ خَلَقْنَا تَفْضِيلًا [الإسراء: 70]
மற்ற படைப்பினங்களிலும் அந்த ஏற்ற வித்தியாசம் இருக்கிறது.
கற்கள் பல வகை உள்ளன. அவற்றில் மாணிக்க கற்கள், ரத்தினங்கள், வைரங்கள், சாதாரண உபயோக கற்கள், உபயோகமற்ற கற்கள் என பல வகை இருக்கிறது.
இப்படியே திரவங்கள், தாவரங்கள், உயிரிணங்கள் என எல்லாவற்றிலும் இது போன்ற ஏற்றத்தாழ்வு இருக்கவே செய்கிறது.
ஒரே தண்ணீர் பாய்ச்சப்படும் தோட்டங்களில் கிடைக்கும் கனிகளில் கூட சுவைகளில் வேறுபாடு இருக்கிறது. என்பதை பின் வரும் வசனம் எடுத்துரைக்கிறது.
وَفِي الْأَرْضِ قِطَعٌ مُتَجَاوِرَاتٌ وَجَنَّاتٌ مِنْ أَعْنَابٍ وَزَرْعٌ وَنَخِيلٌ صِنْوَانٌ وَغَيْرُ صِنْوَانٍ يُسْقَى بِمَاءٍ وَاحِدٍ وَنُفَضِّلُ بَعْضَهَا عَلَى بَعْضٍ فِي الْأُكُلِ إِنَّ فِي ذَلِكَ لَآيَاتٍ لِقَوْمٍ يَعْقِلُونَ [الرعد: 4]
அந்த வகையில் மனிதர்களிலும் ஏற்ற வித்தியாசம் இருக்கிறது.
மனிதர்களிடையே உள்ள ஏற்ற வித்தியாசங்களை இரு வகையாக பிரிக்கலாம்.
1 உலகம் சார்ந்த விஷயங்களில் உள்ள ஏற்ற வித்தியாசம்.
وَاللَّهُ فَضَّلَ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ فِي الرِّزْقِ فَمَا الَّذِينَ فُضِّلُوا بِرَادِّي رِزْقِهِمْ عَلَى مَا مَلَكَتْ أَيْمَانُهُمْ فَهُمْ فِيهِ سَوَاءٌ أَفَبِنِعْمَةِ اللَّهِ يَجْحَدُونَ [النحل: 71]
v சிலருக்கு கையழுத்து போடக்கூட நேரமில்லாத அளவுக்கு வேலைப்பளுவை சுமந்தும் குறைவான வருமானம் பார்க்கின்றனர்.
v இன்னும் சிலர் கையழுத்து போடுவதால் மட்டுமே கை நிறைய வருமானம் பெறும் நிலையில் இருக்கின்றனர்.
v சிலர் வீட்டில் இருந்து கொண்டே லட்சக்கணக்கில் சம்பாதிக்கின்றனர்.
v இன்னும் சிலர் வீட்டுக்கு வரக்கூட நேரமில்லாத அளவுக்கு பாடுபட்டும் குறைவான வருமானமே பெறுகின்ற நிலையில் இருக்கின்றனர்.

வருமானத்தில் மட்டுமில்லாமல் உடல் வலிமையில், ஆரோக்கியத்தில், அறிவாற்றலில் என்று பல விஷயங்களில் ஏற்றத்தாழ்வு இருக்கிறது.


2- மறுமை சார்ந்த விஷயங்களை கவனித்து ஏற்றத்தாழ்வு
v முஃமின் அல்லாதவர்களைவிட முஃமின்களுக்கு சிறப்பு
أَفَمَنْ كَانَ مُؤْمِنًا كَمَنْ كَانَ فَاسِقًا لَا يَسْتَوُونَ (18) أَمَّا الَّذِينَ آمَنُوا وَعَمِلُوا الصَّالِحَاتِ فَلَهُمْ جَنَّاتُ الْمَأْوَى نُزُلًا بِمَا كَانُوا يَعْمَلُونَ (19) وَأَمَّا الَّذِينَ فَسَقُوا فَمَأْوَاهُمُ النَّارُ كُلَّمَا أَرَادُوا أَنْ يَخْرُجُوا مِنْهَا أُعِيدُوا فِيهَا وَقِيلَ لَهُمْ ذُوقُوا عَذَابَ النَّارِ الَّذِي كُنْتُمْ بِهِ تُكَذِّبُونَ (20)
قُلْ هَلْ يَسْتَوِي الْأَعْمَى وَالْبَصِيرُ أَمْ هَلْ تَسْتَوِي الظُّلُمَاتُ وَالنُّورُ [الرعد: 16]
v முஃமின்களிலும்  ஸாலிஹீன் எனும் நல்லவர்களுக்கு சிறப்பு
أَفَمَنِ اتَّبَعَ رِضْوَانَ اللَّهِ كَمَنْ بَاءَ بِسَخَطٍ مِنَ اللَّهِ وَمَأْوَاهُ جَهَنَّمُ وَبِئْسَ الْمَصِيرُ (162) هُمْ دَرَجَاتٌ عِنْدَ اللَّهِ وَاللَّهُ بَصِيرٌ بِمَا يَعْمَلُونَ  [آل عمران: 163]
அதைவிட ஷுஹதாக்கள் சிறப்பானவர்கள்
அவர்களை விட சித்தீகீன்கள் சிறப்பானவரக்கள்
அவர்களைவிட நபிமாரக்ள் அவர்களில் உலுல் அஜ்ம் எனும் உறுதி மிக்க ஐவர் சிறப்பானவர்கள்.
فَاصْبِرْ كَمَا صَبَرَ أُولُو الْعَزْمِ مِنَ الرُّسُلِ  الأحقاف: 35
அவர்களிலும் கலீலாகிய இருவர்.
அவ்விருவரிலும் முஹம்மது நபி ஸல் அவர்கள் அதிக அந்தஸ்துக்குரியவர்கள்.
تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ  البقرة: 253
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا سَيِّدُ وَلَدِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ، وَأَوَّلُ مَنْ يَنْشَقُّ عَنْهُ الْقَبْرُ، وَأَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ» صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மறுமை நாளில் ஆதமின் மக்கள் (மனிதர்கள்) அனைவருக்கும் தலைவன் நானே. முதன் முதலில் மண்ணறை பிளந்து (உயிர்த்து) எழுபவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை செய்பவனும் நானே. முதன்முதலில் பரிந்துரை ஏற்கப்படுபவனும் நானே.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 4575. 
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «أَنَا أَوَّلُ النَّاسِ يَشْفَعُ فِي الْجَنَّةِ وَأَنَا أَكْثَرُ الْأَنْبِيَاءِ تَبَعًا» صحيح مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நானே சொர்க்கத்திற்காகப் பரிந்துரைக்கும் முதல் மனிதராவேன்; இறைத்தூதர்களிலேயே அதிகமான மக்களால் பின்பற்றப்படுபவன் ஆவேன்.
இதை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். ஸஹீஹ் முஸ்லிம் 330. 
இப்படி இருவகையான ஏற்றத்தாழ்வு இருக்கின்றது.
பொதுவாக நாம் நம்முடைய தராதரத்தை பிறருடைய தராதரத்துடன் ஒப்பிட்டுப்பார்க்கும் பழக்கம் உள்ளவர்களாக இருக்கின்றோம்.
அவற்றில் அவசியமான ஒப்பீடும் இருக்கின்றது அனாவசியமான ஒப்பீடும் இருக்கின்றது.
1 துன்யாவுடைய விஷயத்தில் நம்மைவிட கீழ் நிலையில் இருப்பவர்களோடு நம் நிலையை ஒப்பீடு செய்து  பார்ப்பது அவசியமானதாகும். ஏனெனில் அது நன்றியுணர்வை வளர்க்கும்.
மேல் நிலையில் உள்ளவர்களோடு நம் நிலையை ஒப்பிட்டு அவருக்கு கிடைத்தது நமக்கு கிடைக்கவில்லையே என வயிற்றெரிச்சல் கொள்வது அனாவசியமானது. மேலும் நன்றி கெட்ட தன்மையை உருவாக்கும்.
وَلَا تَتَمَنَّوْا مَا فَضَّلَ اللَّهُ بِهِ بَعْضَكُمْ عَلَى بَعْضٍ النساء: 32
 عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا نَظَرَ أَحَدُكُمْ إِلَى مَنْ فُضِّلَ عَلَيْهِ فِي المَالِ وَالخَلْقِ فَلْيَنْظُرْ إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْهُ»صحيح البخاري
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்' 
செல்வத்திலும் தோற்றத்திலும் தம்மை விட மேலான ஒருவரை உங்களில் கண்டால், உடனே (அவற்றில்) தம்மைவிடக் கீழனாவர்களை அவர் (நினைத்துப்) பார்க்கட்டும். 
என அபூ ஹுரைரா(ரலி) அறிவித்தார். ஸஹீஹுல் புஹாரீ 6490. 
عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «انْظُرُوا إِلَى مَنْ هُوَ أَسْفَلَ مِنْكُمْ، وَلَا تَنْظُرُوا إِلَى مَنْ هُوَ فَوْقَكُمْ، فَإِنَّهُ أَجْدَرُ أَنْ لَا تَزْدَرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ» سنن الترمذي

ஒரு காட்டில் நிறைய விலங்குகள் வசித்து வந்தன.

அனைத்து விலங்குகளும்ஒற்றுமையாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தன.அங்கே வசித்த

மயில் மட்டும் எப்போதும் மற்ற பறவைகள் மற்றும் விலங்குகளை பார்த்து பொறாமை பட்டுக் கொண்டே இருந்தது.

உதாரணத்திற்கு,

யானையை பார்த்து பெரியதாய் இருக்கிறது என்றும்மானை பார்த்து வேகமாக ஓடுகிறது என்றும் பொறாமைப்படும். இப்படியிருக்க ஒரு மழைகாலத்தில் அந்த மயில் அழகாக ஆடத் துவங்கியது.

அப்போது பாட ஆரம்பித்த மயில் தன் மோசமான குரலை எண்ணி அழத் துவங்கியது. அப்போது அங்கு வந்த மைனா மயிலை சமாதானப் படுத்தி அருகில் சென்றது.

மயில் தனது வருத்தத்தை மைனாவிடம் கூற, மைனா மயிலிடம், நீ மிகவும் அழகாய் இருக்கிறாய், அதை நினைத்து நீ சந்தோஷபட்டிருக்கிறாயா என்றது,

மயில் சிறிது நேரம் மௌனமாய் இருந்துவிட்டு இல்லைஎன்று பதில் கூறியது.

இதனை கேட்டு சிரித்த மைனா,

உலகில் பிறந்த ஒவ்வொருவருக்கும் எதாவது ஒரு சிறப்பும் வலிமையையும் இருக்கும்அது என்னஎன்பதை உணர்ந்து அதனை மேம்படுத்த வேண்டும். அதை விட்டு எது நம்மிடம் இல்லையோ அதை நினைத்து வருத்தப்படவோ பொறாமைப்படவோ கூடாது என அறிவுரை கூறியது.

தன் தவறை உணர்ந்த மயில் மைனாவிற்கு நன்றி தெரிவித்தது.  
நன்றி eluthu.com

http://eluthu.com/kavithai/234820.html

"எனக்கு செருப்பில்லையே என கவலைப்பட்டுக்கொண்டே இருந்தேன் கால் இல்லாதவனைப் பார்க்கும் வரை" என்று ஒரு அறிஞர் கூறுவார்.

2 தீனுடைய விஷயத்தில் தன்னை விட மேல் நிலையில் இருப்பவர்களை பார்த்து ஆவல் கொண்டு நன்மையை அதிகரிக்க வேண்டும். இது அவசியமான ஒப்பீடு
தன்னை விட கீழ் நிலையில் இருப்பவர்களைப் பார்த்து சமாதானம் கொள்வது, அவருக்கு நாம் பரவாயில்லை என ஆறுதல் கொள்வது கூடாது. அது அனாவசியமான ஒப்பீடாகும்.

عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ، عَنْ جَدِّهِ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «خَصْلَتَانِ مَنْ كَانَتَا فِيهِ كَتَبَهُ اللَّهُ شَاكِرًا صَابِرًا، وَمَنْ لَمْ تَكُونَا فِيهِ لَمْ يَكْتُبْهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَابِرًا، مَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ فَوْقَهُ فَاقْتَدَى بِهِ، وَنَظَرَ فِي دُنْيَاهُ إِلَى مَنْ هُوَ دُونَهُ فَحَمِدَ اللَّهَ عَلَى مَا فَضَّلَهُ بِهِ عَلَيْهِ كَتَبَهُ اللَّهُ شَاكِرًا وَصَابِرًا، وَمَنْ نَظَرَ فِي دِينِهِ إِلَى مَنْ هُوَ دُونَهُ، وَنَظَرَ فِي دُنْيَاهُ إِلَى مَنْ 
هُوَ فَوْقَهُ فَأَسِفَ عَلَى مَا فَاتَهُ مِنْهُ لَمْ يَكْتُبْهُ اللَّهُ شَاكِرًا وَلَا صَابِرًا» . سنن الترمذي


 எவரிடம் இரு குணங்கள் இருக்குமோ, அவரை நன்றி செலுத்துபவர்கள் மற்றும் பொறுமையாளர்கள் கூட்டத்தில் அல்லாஹ் சேர்ப்பான். எவரிடம் இவ்விரு குணமும் இல்லையோ அவரை நன்றி செலுத்துவோர், பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் கணிக்கமாட்டான். எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தனக்கு மேலுள்ளவரைப் பார்த்து, அவரைப் பின்பற்றி, உலக காரியங்களில் தன்னைவிடத் தாழ்ந்த நிலையில் உள்ளவர்களைப் பார்த்து (அல்லாஹ் தனது அருளாலேயே) அவரை விடச் சிறந்த நிலையில் தன்னை வைத்துள்ளான் என்று கருதி, அவனுக்கு நன்றி செலுத்தவும் செய்கிறாரோ, அவரை நன்றி செலுத்துபவர் மற்றும் பொறுமையாளர் கூட்டத்தில் அல்லாஹ் எழுதிவிடுகிறான், எம்மனிதர் தீனுடைய காரியங்களில் தன்னைவிடக் குறைந்தவரைக் கண்டும், உலக காரியங்களில் தன்னைவிட மேலானவர்களைப் பார்த்தும், தனக்கு உலகம் குறைவாகக் கிடைத்ததற்காகக் கைசேதப்படுவாரோ, அவரை அல்லாஹ் பொறுமையாளர்களிலும் கணிக்கமாட்டான், நன்றியாளர்களிலும் கணிக்கமாட்டான்’’ என்று அருமை, நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஹஜ்ரத் அப்துல்லாஹ் இப்னு அம்ரு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் நூல்: திர்மிதீ