திங்கள், 21 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 01

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 01

 

ஒரு இமாம் லுஹர் தொழுகை நடத்தி இருக்கிறார் நான்காவது ரக்அத்தில் ஒரு ஸஜ்தா (மட்டும்) செய்து விட்டு (இரண்டாம் ஸஜ்தாவை மறந்து)  அத்தஹிய்யாத்தில் அமர்ந்து விட்டார் (அவரைப் பின்பற்றி) தொழுபவர்கள் "அல்லாஹ் அக்பர்" என்று கூறி இரண்டாம் ஸஜ்தாவை ஞாபகப் படுத்த, அவர் ஸஜ்தாவை செய்யாமல் ஐந்தாவது ரக்அத்துக்கு எழுந்து நின்று கொண்டார் அப்போதும் தொழுகையாளிகள் "அல்லாஹ் அக்பர்" கூறி அவரை நிற்க விடவில்லை.

 

"என்ன செய்வது" என்று யோசித்த இமாம் மறுபடியும் அத்தஹிய்யாத்தில் அமர்ந்து, ஸஜ்தா ஸஹ்வு செய்து, ஒரு வழியாக தொழுகையை முடித்தார்.

 

இந்த தொழுகை கூடுமா? என்பது கேள்வி

 

"ஆமாம்! அதான் ஸஜ்தா ஸஹ்வு செய்திட்டாருல்ல  தொழுகை கூடிப் போயிடும் தானே" என்று எண்ணுபவரா நீங்கள்?

அப்ப இத படிங்க!

 

அந்த தொழுகை கூடாது திரும்பத் தொழுவது அவசியம்.

ஏன்னா

"ஒவ்வொரு ரக்அத்திலும் இரு ஸஜ்தாக்கள் செய்வது ஃபர்ளாகும்"

ஃபர்ள் விடுபட்டால் தொழுகை கூடாது; அதனால் ஏற்படும் குறையை ஸஜ்தா ஸஹ்வு மூலம் நிவர்த்தி செய்யவும் முடியாது.

வாஜிபான காரியங்கள் ஏதாவது விடுபட்டால் தான் ஸஜ்தா ஸஹ்வு மூலம் நிவர்த்தி செய்ய முடியும்.

 

قال فی الہندیة: ومنہا السجود السجود الثانی فرض کالأول باجماع الأمة کذا فی الزاہدی ۔ (الہندیہ: ۱/۶۸)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக