புதன், 23 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 05

வடகரை தாவூதி ஆலிம் பதில் 05


ஃபர்ள் தொழுகையில் மூன்றாவது நான்காவது ரக்அத்களில் அல்ஹம்து சூரா மட்டும் தானே ஓதனும்? ஆனால் நான் (அல்ஹம்து சூராவுக்குப் பின்) மறதியாக ஒரு சூராவை ஓதி விட்டேன். "அப்ப நான் ஸஜ்தா ஸஹ்வு செய்திருக்கனும் தானே?" என்று ஒருவர் கேட்டார். 


அதே சந்தேகம் உங்களுக்கும் உண்டா? 


 அப்ப இத படிங்க 


ஃபர்ளான தொழுகையின் மூன்றாவது நான்காவது ரக்அத்களில் (அல்ஹம்து மட்டும் ஓதி நிறுத்திக் கொள்வதும்) மற்ற சூரா ஏதும் ஓதாமல் இருப்பதும் சுன்னத் ஆகும் (வாஜிபு ஒன்றும் இல்லை) எனவே ஒருவர் தவறுதலாக ஓதி விட்டால் சுன்னத்துக்கு மாற்றம் செய்தவராவார். (அவ்வளவுதான்) தொழுகையில் சுன்னத்தான காரியங்களை விடுவதால் ஸஜ்தா ஸஹ்வு செய்ய வேண்டியதில்லை.


 குறிப்பு:- வாஜிப் மற்றும் சுன்னத், நஃபில் தொழுகைகளின் அனைத்து ரக்அத்களிலும் அல்ஹம்து சூராவுக்குப் பின் ஒரு சூரா, அல்லது மூன்று சிறிய ஆயத்துக்கள், இல்லையெனில் ஒரு பெரிய ஆயத் ஓதுவது வாஜிபாகும்.



ولو قرأ في الأخریین الفاتحة والسورة، لایلزم السہو وہو الأصح الخ (ہندیہ)


 (وَاكْتَفَى) الْمُفْتَرِضُ (فِيمَا بَعْدَ الْأُولَيَيْنِ بِالْفَاتِحَةِ) فَإِنَّهَا سُنَّةٌ عَلَى الظَّاهِرِ، وَلَوْ زَادَ لَا بَأْسَ بِهِ 


(قَوْلُهُ وَاكْتَفَى الْمُفْتَرِضُ) قُيِّدَ بِهِ لِأَنَّهُ فِي النَّفْلِ وَالْوَاجِبِ تَجِبُ الْفَاتِحَةُ وَالسُّورَةُ أَوْ نَحْوِهَا


(قَوْلُهُ وَلَوْ زَادَ لَا بَأْسَ) أَيْ لَوْ ضَمَّ إلَيْهَا سُورَةً لَا بَأْسَ بِهِ لِأَنَّ الْقِرَاءَةَ فِي الْأُخْرَيَيْنِ مَشْرُوعَةٌ مِنْ غَيْرِ تَقْدِيرٍ وَالِاقْتِصَارُ عَلَى الْفَاتِحَةِ مَسْنُونٌ لَا وَاجِبٌ فَكَانَ الضَّمُّ خِلَافَ الْأَوْلَى وَذَلِكَ لَا يُنَافِي الْمَشْرُوعِيَّةَ،


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 511):

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக