செவ்வாய், 22 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 04

வடகரை தாவூதி ஆலிம் பதில் 04

தொழுது கொண்டிருக்கும் போது  தாய் அல்லது தந்தை யாரேனும் அழைத்தால் தொழுகையை விட்டு விட்டு அவர்கள் அழைப்புக்கு பதில் தர வேண்டுமா? என்று ஒருவர் கேட்டார் என்றால், "அதெல்லாம் கூடாது தொழுகையை முடித்து விட்டுத்தான் பதிலளிக்க வேண்டும்" என்று பதில் கூறுபவரா நீங்கள்?

 அப்ப இத படிங்க

ஃபர்ள் தொழுது கொண்டிருக்கும் போது தாய் அல்லது தந்தை  யாரேனும் மிகவும் அவசியமான அவசரமான உதவிக்காக  அழைத்தால் தொழுகையை (முறித்து) நிறுத்தி விட்டு பதிலளித்து உதவ வேண்டும்.

சாதாரணமாக அழைத்தால் ஃபர்ள் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிப்பது அனுமதி இல்லை.

ஆனால் நஃபில் தொழுது கொண்டிருக்கும் போது, (நாம் தொழுகிறோம் என்பதை அறியாமல்) சாதாரணமாக அழைத்தாலும் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிக்க வேண்டும்.

நாம் தொழுகிறோம் என்பதை அறிந்தே அழைத்தால் தொழுகையை நிறுத்தி விட்டு பதில் அளிக்க வேண்டியதில்லை.


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 51):

 وَلَوْ دَعَاهُ أَحَدُ أَبَوَيْهِ فِي الْفَرْضِ لَا يُجِيبُهُ إلَّا أَنْ يَسْتَغِيثَ بِهِ. وَفِي النَّفْلِ إنْ عَلِمَ أَنَّهُ فِي الصَّلَاةِ فَدَعَاهُ لَا يُجِيبُهُ وَإِلَّا أَجَابَهُ

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக