திங்கள், 21 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 02

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 02

ஒருவர் தொழுது முடித்ததும் தன் உடையில் (முரட்டு) கொசு ஒன்று நசுங்கி அதன் இரத்தம் படர்ந்திருப்பதைக் கண்டார் அவர் ஆடையை சுத்தம் செய்து தொழுகையை திரும்பத் தொழுவது அவசியமா? என்றொரு கேள்வி முன்வைக்கப் பட்டால் "ஆம்! அதுதான் (இரத்தம்) கடுமை நிறைந்த நஜீஸ் ஆச்சே ஒரு திர்ஹம் விட அதிகமாக ஆடையில் பட்டால் தொழுகை கூடாது (ஒரு திர்ஹமை விட குறைவாக இருந்தால் பொருத்துக் கொள்ளப்படும்)"

என்று பதில் கூறுபவரா நீங்கள்?

 அப்ப இத படிங்க!

ஓடும் தன்மையுள்ள இரத்தம்( دم مسفوح) தான் கடினம் நிறைந்த நஜீஸ். ஓடும் தன்மையில் இல்லாத இரத்தம் கடினம் நிறைந்த நஜீஸ் அல்ல  என்பதையும் தாண்டி அது தாஹிர் (நஜீஸே இல்லை) என்று ஃபிக்ஹ் கிதாப்களில் வந்துள்ளது.


الفتاوى الهندية (1/ 46):

"ودم البق والبراغيث والقمل والكتان  طاهر وإن كثر، كذا في السراج الوهاج".

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக