சனி, 26 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 07,08.

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 07

இமாமும் நண்பர் ஒருவரும் பயணத்தில் ஒரு சிறிய பள்ளிவாசலில் மஃரிப் தொழுது முடித்து அவசரமாக கிளம்பினார்கள்.


 அப்போது நண்பர் தொழுது கொண்டிருந்த ஒருவருக்கு முன்னால் (சற்று விலகி) குறுக்கே கடந்து வந்தார்.


அவரிடம்  ஏங்க தொழுது கொண்டிருக்கும் போது அவருக்கு முன்னால் (குறுக்கே) வந்தீங்க?  என்று கேட்டார் இமாம்.


 அதற்கவர், நம்ம பள்ளி வாசலில் ஒருநாள் நீங்கள் அப்படித்தான் (தொழுது கொண்டிருப்பவரை தாண்டி) வந்தீர்கள் ஏன் என்று கேட்டதற்கு   அவர் ஸஜ்தா செய்யும் இடம் அல்லது அதற்கு நெருக்கமாகத்தான் வரக்கூடாது. சற்று விலகி கடந்து வரலாம்னு சொன்னீங்களே இமாம் என்றார் அவர்.


 "அப்படி இல்லீங்க ஜீ!"


 என்று கூறிய இமாம் அவரிடம் கீழ் வரும் முறைப்படி சட்டத்தை விளக்கினார்.


நாம் தொழுகையை நிறைவேற்றும் பள்ளிவாசல்கள் ஷரீஅத் பார்வையில் இரு வகைப்படும்.


 (இரண்டிலும் சில சட்டங்கள் வேறுபடும்)

 

1) பெரிய பள்ளிவாசல். 


அது நாற்பது முழம் (சுமார் 60 அடிகள் அல்லது அதை விட அதிகமாக) நீளம் கொண்டதாக இருக்கும்.



2)சிறிய பள்ளிவாசல்


அது நாற்பது முழம் (சுமார் 60 அடிகளை) விட குறைவான நீளம் கொண்டதாக இருக்கும்.


 பெரிய பள்ளிவாசலில்  தொழுது கொண்டிருப்பவரை குறுக்கே கடப்பது தவறு என்பது  (திரையோ தடுப்போ இல்லாமல்) தொழுபவருக்கு மிக நெருக்கமாக கடந்து செல்லும் போது தான்.


சுமார் இரண்டு ஸஃப்புகள் தாண்டி கடந்து செல்வது தவறில்லை. 


(நம்ம பள்ளிவாசல் பெரிய பள்ளிவாசல் எனவே நான் அங்கு நடந்து கொண்டது தவறில்லை.)


ஆனால் சிறிய பள்ளிவாசலில், தெழுது கொண்டிருப்பவரின் குறுக்கே (திரையோ தடுப்போ இல்லாமல்) கடந்து செல்வது குற்றமாகும் அது தொழுகையாளிக்குநெருமாக இருந்தாலும் சரி இரண்டு மூன்று ஸஃப்புகள் முன்னால் விலகி கடந்தாலும் சரி.  

ஆனால் திரை, தூண் போன்ற தடுப்பு இருந்தால் அதற்கு அப்பால் உள்ள பகுதியில் கடந்து செல்லலாம் தவறில்லை.


(இப்போது நாம் தொழுத) இது சிறிய பள்ளிவாசல். என்றார் இமாம்.


"அப்படீங்களா ஜீ!" என்று கேட்டுக் கொண்டார் அந்த நண்பர்.


المسجد الکبیر ہو أن یکون أربعین فأکثر وقیل ستین فأکثر والصغیر بعکسہ۔ إلی قولہ أفاد أن المختار الأول (طحطاوی علی المراقی: ۳۴۲، اشرفی) ومسجد صغیر ہو أقل من ستین ذراعاً وقیل أربعین وہو المختار کما أشار إلیہ فی الجوہر۔ (شامی زکریا: ۲/۳۹۸)



فَحَاصِلُ الْمَذْهَبِ عَلَى الصَّحِيحِ أَنَّ الْمَوْضِعَ الَّذِي يُكْرَهُ الْمُرُورُ فِيهِ هُوَ أَمَامَ الْمُصَلِّي فِي مَسْجِدٍ صَغِيرٍ وَمَوْضِعُ سُجُودِهِ فِي مَسْجِدٍ كَبِيرٍ أَوْ فِي الصَّحْرَاءِ


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 18):


شریعت کے بعض احکام میں جو مسجد کبیر اور مسجد صغیر کا فرق ہے، ان میں مسجد کبیر سے مراد وہ مسجد ہے جو ۴۰/ ذراع ہو، یعنی: ۶۰/ فٹ (۱۸/ میٹر)ہو۔ اور مفتی بہ قول کے مطابق اس میں صرف لمبائی کا اعتبار ہوتا ہے، چوڑائی کا اعتبار نہیں ہوتا(امداد الاحکام، ۱: ۴۴۴،مطبوعہ: مکتبہ دار العلوم کراچی)؛ لہٰذا جو مسجد ۱۸/میٹر لمبی ہو، وہ شرعاً مسجد کبیر ہے اور جس کی لمبائی اس سے کم ہو وہ مسجد صغیر ہے۔

دار العلوم دیوبند


வடகரை தாவூதி ஆலிம் பதில் 08

ஒரு ஊரிலுள்ள இரு பள்ளிவாசல்களின் இமாம்கள்  அவ்வப்போது சந்தித்து ஃபிக்ஹ் மஸாயில் பற்றி உரையாடுவர்.

அப்படி ஒரு நாள் நடந்த உரையாடல் இது:

 இமாம்-1: ஃபர்ள் தொழுபவர் இறுதி (அத்தஹிய்யாத்தில்) அமர்வில் உட்கார்ந்து, ஸலாம் கொடுக்காமல், மறதியாக (அதிகப்படியான ரக்அத்துக்கு) எழுந்து நின்று விட்டால் சட்டம் என்ன தெரியுமா?

 இமாம்-2: அந்த அதிகப்படியான ரக்அத்தில் ஸஜ்தா செய்யும் முன்பே ஞாபகம் வந்து விட்டால் உடனே அத்தஹிய்யாத்தில் உட்கார்ந்து ஸஜ்தா ஸஹ்வு செய்து தொழுகையை நிறைவு செய்யனும். 

ஆனால் அந்த அதிகப்படியான ரக்அத்துக்கு ஸஜ்தா செய்த பிறகுதான் (தவறுதலாக எழுந்து விட்டோம் என்று)  ஞாபகம் வந்தது என்றால் அந்த ஒரு ரக்அத்துடன் இன்னும் ஒரு ரக்அத்தை சேர்த்து தொழுது இறுதியில் ஸஜ்தா ஸஹ்வு செய்திட வேண்டும். 

அப்போது (ஃபர்ள் தொழுகையின் ரக்அத்களை விட) அதிகமாக தொழுத இரண்டு ரக்அத்துகள் நஃபிலாகி விடும்.

 இமாம்-1: அப்படியானால் நீங்கள் சொல்லும் இந்த வழிமுறை ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஒத்து வராதே? ஏனென்றால் ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஃபர்ள் தொழுத பிறகு நஃபில் தொழுவது மக்ரூஹ் ஆச்சே?

 இமாம்-2 

 அப்படி இல்லீங்க ஜீ! 

ஃபஜ்ர் மற்றும் அஸ்ரில் ஃபர்ள் தொழுத பிறகு,  மக்ரூஹான நேரம் என்ற நினைவிருக்க (திட்டமிட்டு) நஃபில் தொழுகையை ஆரம்பிப்பது தான் மக்ரூஹ்.

ஆனால் கவனமில்லால் மறதியாக ஒருவர் நஃபில் தொழுகையை துவங்கி விட்டார் என்றால் (ஞாபகம் வந்த பிறகும்) அவர் அதை தொடர்வது மக்ரூஹ் அல்ல.

எனவே  மேலே குறிப்பிட்ட அந்தச் சட்டம் ஃபஜ்ர், அஸ்ர்  உட்பட அனைத்து ஃபர்ளான தொழுகைகளுக்கும் பொருந்தும்.


 இமாம்-1 ஓ..!அப்படீங்களா ஜீ!!


الجوهرة النيرة على مختصر القدوري (1 / 70):

 وَيُكْرَهُ أَنْ يَتَنَفَّلَ بَعْدَ صَلَاةِ الْفَجْرِ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَبَعْدَ صَلَاةِ الْعَصْرِ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ) يَعْنِي قَصْدًا أَمَّا لَوْ قَامَ فِي الْعَصْرِ بَعْدَ الْأَرْبَعِ 

سَاهِيًا أَوْ فِي الْفَجْرِ لَا يُكْرَهُ وَيُتِمُّ؛ لِأَنَّهُ مِنْ غَيْرِ قَصْدٍ


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 87):

(وَإِنْ قَعَدَ فِي الرَّابِعَةِ) مَثَلًا قَدْرَ التَّشَهُّدِ (ثُمَّ قَامَ عَادَ وَسَلَّمَ) وَلَوْ سَلَّمَ قَائِمًا صَحَّ؛ ثُمَّ الْأَصَحُّ أَنَّ الْقَوْمَ يَنْتَظِرُونَهُ، فَإِنْ عَادَ تَبِعُوهُ (وَإِنْ سَجَدَ لِلْخَامِسَةِ سَلَّمُوا) لِأَنَّهُ تَمَّ فَرْضُهُ، إذْ لَمْ يَبْقَ عَلَيْهِ إلَّا السَّلَامُ (وَضَمَّ إلَيْهَا سَادِسَةً) لَوْ فِي الْعَصْرِ، وَخَامِسَةً فِي الْمَغْرِبِ: وَرَابِعَةً فِي الْفَجْرِ بِهِ يُفْتَى (لِتَصِيرَ الرَّكْعَتَانِ لَهُ نَفْلًا) وَالضَّمُّ هُنَا آكَدُ، وَلَا عُهْدَةَ لَوْ قَطَعَ، وَلَا بَأْسَ بِإِتْمَامِهِ فِي وَقْتِ كَرَاهَةٍ عَلَى الْمُعْتَمَدِ (وَسَجَدَ لِلسَّهْوِ)


الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (2 / 87):

(قَوْلُهُ لَوْ فِي الْعَصْرِ إلَخْ) أَشَارَ إلَى أَنَّهُ لَا فَرْقَ فِي مَشْرُوعِيَّةِ الضَّمِّ بَيْنَ الْأَوْقَاتِ الْمَكْرُوهَةِ وَغَيْرِهَا لِمَا مَرَّ أَنَّ التَّنَفُّلَ فِيهَا إنَّمَا يُكْرَهُ لَوْ عَنْ قَصْدٍ وَإِلَّا فَلَا، وَهُوَ الصَّحِيحُ زَيْلَعِيٌّ وَعَلَيْهِ الْفَتْوَى مُجْتَبَى، وَإِلَى أَنَّهُ كَمَا لَا يُكْرَهُ فِي الْعَصْرِ لَا يُكْرَهُ فِي الْفَجْرِ 


الجوهرة النيرة على مختصر القدوري (1 / 78):

(قَوْلُهُ: وَإِنْ قَعَدَ فِي الرَّابِعَةِ قَدْرَ التَّشَهُّدِ ثُمَّ قَامَ إلَى الْخَامِسَةِ وَلَمْ يُسَلِّمْ يَظُنُّهَا الْقَعْدَةَ الْأُولَى عَادَ إلَى الْقُعُودِ مَا لَمْ يَسْجُدْ فِي الْخَامِسَةِ وَيُسَلِّمُ وَيَسْجُدُ لِلسَّهْوِ)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக