வெள்ளி, 25 டிசம்பர், 2020

வடகரை தாவூதி ஆலிம் பதில் 06

வடகரை தாவூதி ஆலிம் பதில் 06


நேற்று நான் குளித்து விட்டு (உளூ செய்யாமல்)  அப்படியே தொழுது விட்டேன் "தொழுகை கூடாது  உளு செய்து மறுபடியும் தொழ வேண்டும்" என்று நண்பர் ஒருவர் சொல்றாரே ஹஜ்ரத்! சட்டம் அப்படித்தானா?  


இது போன்ற கேள்வியை எதிர் கொண்டவரா நீங்கள்? 

 அப்ப இத படிங்க


குளித்து விட்டுத் தொழப்போகும் ஒருவர், தொழுகைக்கு தனியாக உளூ செய்துதான் ஆக வேண்டும் என்று கருதுவது தவறாகும்.



(கடமையான குளிப்பாக இருந்தாலும்கூட) குளித்து விட்ட பின்  (உளூவை முறிக்கும் காரியங்கள் ஏதும் ஏற்படாத வரை) உளூ செய்யாமல் தொழுதாலும் (அந்த தொழுகை உளூவுடனே நிறைவேறி விடும்) கூடிவிடும். 

 

ஏன்னா, 

சுன்னத்தான முறையில் குளிப்பவராக இருந்தால் ஆரம்பமாக உளூ செய்திருப்பார் 

 இல்லையெனில் கட்டாயம் உடல் உறுப்புகள் அனைத்தையும் கழுவி இருப்பார் அப்படியானால் உளூவையும் உள்ளடக்கிய காரியம்தான் குளிப்பு என்று புரிந்து கொள்ள முடிகிறது. 


ஆகவே குளித்து விட்ட  பின் தொழுகைக்கு தனியாக உளூ அவசியமில்லை. 


குறிப்பு:- வாய் கொப்பளிப்பதும் மூக்கில் தண்ணீர் செலுத்தி நாசியை சுத்தம் செய்வதும் குளிப்பு முழுமை பெற  கட்டாயமாகும். 


எனவே கடமையான குளிப்பு குளிப்பவர் அதை கவனமுடன் செய்திருக்க வேண்டும். இல்லையெனில் தொழுகை கூடாமல் போய்விடும்.


"و يقول القاضي في العارضة: لم يختلف أحد من العلماء في أن الوضوء داخل في الغسل..."الخ


 (أبواب الطهارة، باب الوضوء بعد الغسل، ١/ ٣٦٨، معارف السنن)


مشکاة شریف: (ص۴۸) میں ہے: عن عائشة قالت: کان رسول اللہ صلی اللہ علیہ وسلم: لا یتوضأ بعد الغسل رواہ الترمذي وأبوداوٴد والنسائي وابن ماجة اھ اور مرقات شرح مشکاة (۲/۱۳۶، ۱۳۷ مطبوعہ دارالکتب العلمیة) میں ہے: ”کان النبي صلی اللہ علیہ وسلم لا یتوضأ بعد الغسل“ أي: اکتفاء بوضوئہ الأول في الغسل وهو سنة أو باندراج ارتفاع الحدث الأصغر تحت ارتفاع الأکبر بإیصال الماء إلی جمیع أعضائہ وهو رخصة․․․ قال ابن حجر: وقالوا: ولا یشرع وضوءان اتفاقا للخبر الصحیح: ”کان علیہ الصلاة والسلام لا یتوضأ بعد الغسل من الجنابة“ اھ․

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக