புதன், 6 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 17

காட்டுப் பகுதியில் உள்ள நண்பரின் வீட்டுக்கு சென்றிருந்தனர் 

மூன்று சகோதரர்கள்.

அவர்களில் விபரமுள்ள ஒருவர் இமாமாக நிற்க ஜமாஅத்தாக தொழுதனர். 

முதல் ரக்அத்தின் ருகூஃவிலிருந்து தலையை உயர்த்தும் போது, "ஸமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்" வுக்கு பதிலாக (தவறுதலாக) "அல்லாஹ் அக்பர்" என்று கூறிவிட்டார் தொழுகை நடத்தியவர். 

தொழுகை முடிந்த பிறகு "ஏன் ஸஜ்தா ஸஹ்வு செய்யவில்லை?" எனக் கேட்டார் மற்றொருவர்.

 தொழுகை நடத்தியவர், பின் வரும் விளக்கத்தை அளித்தார்.

"தொழுகையில் ஒரு வாஜிபை விட்டால் அல்லது ஒரு வாஜிபையோ ருக்னாக உள்ள காரியத்தையோ தாமதப்படுத்தினால் அல்லது ஒரு ருக்னை திரும்பவும் (இரண்டாம் தடவையாக) செய்து விட்டால் அல்லது ஒரு ருக்னை முன் பின்னாக செய்து விட்டால் அல்லது ஒரு வாஜிபின் தன்மையில் மாற்றம் செய்து விட்டால் அப்போது தான்

ஸஜ்தா ஸஹ்வு செய்வது வாஜாபாகும்.

தொழுகையில் ஒரு நிலையிலிருந்து அடுத்த நிலைக்கு மாறும் போது சொல்லப்டும் தக்பீர்கள் வாஜிபு அல்ல. மாறாக, சுன்னத் தான் எனவே ஒருவர் ருகூஃவிலிந்து தலையை உயர்த்தும் போது தவறுதலாக "அல்லாஹு அக்பர்" என்று சொல்லி விட்டால் (அல்லது ஒன்றுமே சொல்லாமல் விட்டாலும்) அதனால் ஸஜ்தா ஸஹ்வு செய்யனும் என்று அவசியமில்லை. 


"وَلَا يَجِبُ السُّجُودُ إلَّا بِتَرْكِ وَاجِبٍ أَوْ تَأْخِيرِهِ أَوْ تَأْخِيرِ رُكْنٍ أَوْ تَقْدِيمِهِ أَوْ تَكْرَارِهِ أَوْ تَغْيِيرِ وَاجِبٍ بِأَنْ يَجْهَرَ فِيمَا يُخَافَتُ، وَفِي الْحَقِيقَةِ وُجُوبُهُ بِشَيْءٍ وَاحِدٍ وَهُوَ تَرْكُ الْوَاجِبِ، كَذَا فِي الْكَافِي. وَلَا يَجِبُ بِتَرْكِ التَّعَوُّذِ وَالْبَسْمَلَةِ فِي الْأُولَى وَالثَّنَاءِ وَتَكْبِيرَاتِ الِانْتِقَالَاتِ". 


الفتاوى الهندية

(الْبَابُ الثَّانِي عَشَرَ فِي سُجُودِ السَّهْوِ، ١/ ١٢٦)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக