வடகரை தாவூதி ஆலிம் பதில் 28
சில நாட்களாக கடுமையான சளி, இருமலால் சிரமப்பட்டார் அந்த முஅத்தின்.
சிகிச்சைக்காக ஒரு வாரம் ஓய்வு எடுத்துக் கொண்ட பின் மறுபடியும் பாங்கு சொல்ல "மைக்" முன் போய் நின்றார்.
பாங்கின் சில வாக்கியங்களைத்தான் சொல்லி இருப்பார்; அதற்குள் விடா இருமல் தொற்றிக் கொண்டது.
அடுத்த வாக்கியம் சொல்ல முடியாமல் திணறினார்.
இதை உணர்ந்த அவர் மகன், அவரை விலக்கி விட்டு, (பாங்கின்) மீதமுள்ள வாக்கியங்களை சொல்லி ஒரு வழியாக பாங்கை நிறைவு செய்தார்.
தன் அறையில் இருந்து வெளியே வந்த இமாம், முஅத்தின் மகனை அழைத்து என்ன நடந்தது என்று கேட்டுத் தெரிந்து கொண்டார்.
அதன் பின்னர், "நல்லா தெரிஞ்சுக்கோங்க!
பாங்கு சொல்பவர், ஏதேனும் காரணத்தால் தொடரமுடியாமல் போனால், இன்னொருவர் சென்று, பாங்கை (ஆரம்பத்தில் இருந்து) புதிதாக சொல்ல வேண்டும். மாறாக அவர் விட்டதிலிருந்து (மட்டும்) சொன்னால் பாங்கு (சொல்லிய சுன்னத்) நிறைவேறாது." என்று சட்ட விளக்கம் தந்தார்.
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 393):
أَقُولُ: يَظْهَرُ لِي أَنَّ الْمُرَادَ بِالْوُجُوبِ اللُّزُومُ فِي تَحْصِيلِ سُنَّةِ الْأَذَانِ، وَأَنَّ الْمُرَادَ أَنَّهُ إذَا عَرَضَ لِلْمُؤَذِّنِ مَا يَمْنَعُهُ عَنْ الْإِتْمَامِ وَأَرَادَ آخَرُ أَنْ يُؤَذِّنَ يَلْزَمُهُ اسْتِقْبَالُ الْأَذَانِ مِنْ أَوَّلِهِ إنْ أَرَادَ إقَامَةَ سُنَّةِ الْأَذَانِ، فَلَوْ بَنَى عَلَى مَا مَضَى مِنْ أَذَانِ الْأَوَّلِ لَمْ يَصِحَّ فَلِذَا قَالَ فِي الْخَانِيَّةِ: لَوْ عَجَزَ عَنْ الْإِتْمَامِ اسْتَقْبَلَ غَيْرهُ. اهـ. أَيْ لِئَلَّا يَكُونَ آتِيًا بِبَعْضِ الْأَذَانِ.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக