வெள்ளி, 22 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 32

 

வடகரை தாவூதி ஆலிம் பதில் 32

ஒரு திருமணத்தில் கலந்து கொள்ள அதிகாலை நான்கு மணிக்கே நண்பர்கள் சிலர் காரில் புறப்பட்டனர்.

சிறிது நேரம் கழித்து, வாகனம் ஓட்டுபவர், அழகாக குர்ஆன் ஓதும் காரி ஒருவரின் ஒலிப்பதிவை ஆன் செய்தார்.

30- வது ஜுஸ்வு முழுவதையும் ஓதக்கேட்டனர்.

 ஃபஜ்ர் தொழுகைக்காக ஒரு பள்ளிவாசலை நெருங்கிய போது,

 "ஆமா! இப்ப இரண்டு இடத்தில் ஸஜ்தா ஆயத்துக்களை ஓதக்கேட்டுள்ளோம் அதனால் நாம் 'ஸஜ்தா திலாவத்' செய்ய வேண்டுமா?" என்று கேட்டார் ஒரு நண்பர்.

அதற்கு அந்த ஓட்டுனர், 

அப்படி இல்லீங்க ஜீ!

இதைப்பற்றி ஏற்கனவே நான் நம்ம இமாமிடம் விளக்கம் கேட்டுள்ளேன்.

"பதிவுகள் மூலம் ஓதக் கேட்பது, எதிரொலி போலத்தான். அதனால் 'ஸஜ்தா திலாவத்' வாஜிபு ஆகாது."

என்று கூறியிருக்கிறார்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 129):


 وَكَذَا تَجِبُ عَلَى السَّامِعِ بِتِلَاوَةِ هَؤُلَاءِ إلَّا الْمَجْنُونِ لِعَدَمِ أَهْلِيَّتِهِ لِانْعِدَامِ التَّمْيِيزِ كَالسَّمَاعِ مِنْ الصَّدَى كَذَا فِي الْبَدَائِعِ وَالصَّدَى مَا يُعَارِضُ الصَّوْتَ فِي الْأَمَاكِنِ الْخَالِيَةِ،

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக