வெள்ளி, 22 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 30

 

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 30

கல்லூரி மாணவர்கள் அதிகளவில் வந்து தொழும் பள்ளிவாசல் அது.

இரு கண்களையும் மூடிக்கொண்டு மிக உள்ளச்சத்துடன் தொழுது கொண்டிருந்தார் ஒரு வாலிபர்.

இதைப் பார்த்த இரண்டு மாணவர்கள்,  தொழுகையில் கண்களை மூடிக் கொள்வது பற்றி தங்களுக்குள் தர்க்கம் செய்து கொண்டனர்.

ஒருவர் அப்படி தொழக் கூடாது என்றார்; மற்றவர் அதனால் ஒன்றுமில்லை தொழுவலாம் என்றார்.

இருவரும் இஷா தொழுகைக்கைக்குப்பின் இமாமை அணுகி தங்கள் கருத்துக்களை சொல்லி, எது சரி? என்று கேட்டனர்.

"சாதாரணமாக கண் மூடி தொழுவது மக்ரூஹ் ஆகும்.

 ஆனால் ஒருவருக்கு தொழுகையில் கண்களை மூடினால் தான் கவனம் மற்றும் மன ஓர்மை ஏற்படுகிறது என்றால்   (அவர், அந்த நோக்கத்தில் அப்படிச் செய்வது) தவறில்லை." என்றார் இமாம்.


مراقي الفلاح شرح نور الإيضاح (1 / 130):

و" يكره "تغميض عينه" إلا لمصلحة لقوله صلى الله عليه وسلم: "إذا قام في الصلاة فلا يغمض عينيه" لأنه يفوت النظر للمحل المندوب ولكل عضو وطرف حظ من العبادة


مجمع الأنهر في شرح ملتقى الأبحر (1 / 124):

(وَتَغْمِيضُ عَيْنَيْهِ) لِلنَّهْيِ عَنْهُ إلَّا إذَا قَصَدَ قَطْعَ النَّظَرِ عَنْ الْأَغْيَارِ وَالتَّوَجُّهَ إلَى جَنَابِ الْمَلِكِ السَّتَّارِ،

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக