வியாழன், 14 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 25

 வடகரை தாவூதி ஆலிம் பதில் 25


அந்த நகரின் எல்லையில் பெரிய (ஃபர்னிச்சர்) கடை வைத்திருக்கும் இளைஞர் அவர்.

ஊரடங்கின் காரணமாக பள்ளிவாசலில் பொது ஜமாஅத் அனுமதிக்கப்படாத காலத்தில், தானும் தன் வேலையாட்களும் தொழுத விதங்கள் பற்றி இமாமிடம் நினைவு கூர்ந்தார்.

நாங்கள் கடையிலேயே ஜமாஅத்தாக தொழுது கொண்டோம். என்ன ஒரு மனக்குறை என்றால், வேலை செய்யும் ஒருத்தரும் இகாமத் சொல்ல முன் வருவதில்லை. இவர், அவரை "கை" காட்டுவார். அவர், இவரை "கை" காட்டுவார்; கடைசியில் நானே இகாமத் சொல்லி நானே இமாமாக நின்று தொழுகையும் நடத்துவேன். 

இப்படி செய்தது மட்டும்தான் குழப்பமாகவும் மனதுக்கு வருத்தமாகவும் இருக்கிறது என்று கூறினார். 

அப்போது இமாம் குறுக்கிட்டு "இகாமத் சொல்ல வேறொருவர் (தயாராக) இல்லாத சூழலில் இமாமாக நிற்பவர் இகாமத் சொல்வது ஒன்றும் தவறில்லை தாராளமாக தொழுகை கூடிவிடும் குழப்பமும் வேண்டாம் வருத்தமும் வேண்டாம்" என்று கூறி அவரை ஆறுதல் படுத்தினார்.


الفتاوى الهندية (1 / 57):


 وَإِنْ كَانَ الْمُؤَذِّنُ وَالْإِمَامُ وَاحِدٌ فَإِنْ أَقَامَ فِي الْمَسْجِدِ فَالْقَوْمُ لَا يَقُومُونَ مَا لَمْ يَفْرُغْ مِنْ الْإِقَامَةِ


                                                                                                                                      مصنف ابن أبي شيبة (6 / 146):


عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ، قَالَ: كُنْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي سَفَرٍ، فَلَمَّا طَلَعَ الْفَجْرُ أَذَّنَ وَأَقَامَ، ثُمَّ أَقَامَنِي عَنْ يَمِينِهِ۔۔۔۔

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக