திங்கள், 25 ஜனவரி, 2021

வடகரை தாவூதி ஆலிம் பதில் 38

  வடகரை தாவூதி ஆலிம் பதில் 38

மிக அருமையாக கிராஅத் ஓதும் ஆலிம் ஒருவர், கிராஅத் அரங்கில் பங்கேற்க சுமார் 100 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு ஊருக்கு பயணமானார். 


மஃரிப் தொழுகைக்கு பின் புறப்பட்ட அவர், 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ள ஒரு பள்ளிவாசலில் இஷா தொழுகைக்கு சென்றடைந்தார்.


அழகான கிராஅத் ஓதும் அந்த ஆலிமைப் பார்த்த பள்ளிவாசலின் செயலாளர் இமாமிடம் சென்று ஹஜ்ரத்! அன்றைக்கு ஃபஜ்ர் தொழுகை நடத்திய ஆலிம் வந்திருக்காங்க அவங்க குரலும் ஓதுதலும் மிக அழகாக இருந்துச்சு இன்றைக்கு (இஷா-ஜமாஅத்) அவங்கள தொழுகை நடத்தச் சொல்லுங்களேன் என்றார்.


அதற்கு அந்த இமாம், அவங்க பயணத்தில் இருக்கிறார்கள் எனவே இரண்டு ரக்அத்துகள் தான் தொழ வைக்க முடியும்; மீதமுள்ள இரண்டு ரக்அத்துகளை மக்கள் தாங்களாக எழுந்து நிறைவு செய்ய வேண்டும் அது பற்றி மக்களுக்கு விபரம் சொல்ல வேண்டும் (பெருந்திரளாக மக்கள் கூடும் இந்த பள்ளியில்) ஏன் அந்த ரிஸ்க்? 

அடுத்து எப்பொழுதாவது மஃரிப் அல்லது ஃபஜ்ரில் வந்தால் தொழுகை நடத்தச் சொல்லுவோம் என்றார் இமாம்.


அப்போது செயலாளர் குறுக்கிட்டு, "ஆமா ஊரிலிருந்து இப்பத்தான் புறப்பட்டு போறாங்க; 15 கிலோமீட்டர் தான் பயணம் செய்து வந்திருக்காங்க; 77 கிலோமீட்டர் கடநது தானே கஸ்ர் செய்யனும்?" என்று கேட்டார்.


அதற்கு அந்த இமாம், 

அப்படி இல்லீங்க ஜீ!


77 கிலோமீட்டர் அல்லது அதைவிட அதிகமான தொலைவில்  இருக்கும் ஊரை நாடி பயணம் புறப்பட்டவர், சொந்த ஊரின் எல்லையை கடந்து விட்டாலே கஸ்ரு தான் செய்ய வேண்டும்.


கஸ்ர் செய்து தொழுவதற்கு  பயணத்தின் இலக்கு குறைந்தது 77 கிலோமீட்டராவது இருக்க வேண்டும் அவ்வளவுதான். 77 கிலோமீட்டர் கடந்துருக்க வேண்டும் என்று அவசியமில்லை என்று விளக்கினார் இமாம்.


البحر الرائق شرح كنز الدقائق ومنحة الخالق وتكملة الطوري (2 / 138):


(قَوْلُهُ مَنْ جَاوَزَ بُيُوتَ مِصْرِهِ مُرِيدًا سَيْرًا وَسَطًا ثَلَاثَةَ أَيَّامٍ فِي بَرٍّ أَوْ بَحْرٍ أَوْ جَبَلٍ قَصَرَ الْفَرْضَ الرُّبَاعِيَّ) بَيَانٌ لِلْمَوْضِعِ الَّذِي يُبْتَدَأُ فِيهِ الْقَصْرُ وَلِشَرْطِ الْقَصْرِ وَمُدَّتِهُ وَحُكْمِهُ أَمَّا الْأَوَّلُ فَهُوَ مُجَاوَزَةُ بُيُوتِ الْمِصْرِ لِمَا صَحَّ عَنْهُ - عَلَيْهِ السَّلَامُ - «أَنَّهُ قَصَرَ الْعَصْرَ بِذِي الْحُلَيْفَةِ» وَعَنْ عَلِيٍّ أَنَّهُ خَرَجَ مِنْ الْبَصْرَةِ فَصَلَّى الظُّهْرَ أَرْبَعًا ثُمَّ قَالَ: إنَّا لَوْ جَاوَزْنَا هَذَا الْخُصَّ لَصَلَّيْنَا رَكْعَتَيْنِ وَالْخُصُّ بِالْخَاءِ الْمُعْجَمَةِ وَالصَّادِ الْمُهْمَلَةِ بَيْتٌ مِنْ قَصَبٍ كَذَا ضَبَطَهُ فِي السِّرَاجِ الْوَهَّاجِ وَيَدْخُلُ فِي بُيُوتِ الْمِصْرِ رَبَضُهُ، وَهُوَ مَا حَوْلَ الْمَدِينَةِ مِنْ بُيُوتٍ وَمَسَاكِنَ


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக