வடகரை தாவூதி ஆலிம் பதில் 27
வெள்ளிக் கிழமை ஒரு ஜனாஸாவில் கலந்து கொள்ள சொந்த ஊருக்கு வந்திருந்தார் ஒரு பெரியவர்.
அப்படியே ஜுமுஆ தொழுகை முடிந்ததும் ஊர் திரும்பலாம் என்று முடிவு செய்து முதல் நபராக முன் ஸஃப்பில் வந்து அமர்ந்து கொண்டார்.
முதல் பாங்கு மற்றும் பயான் முடிந்து, (குத்பாவுக்காக) இரண்டாம் பாங்கு சொல்லும் போது, ஒவ்வொரு வாக்கியத்திற்கும் (அருகில் இருப்பவர்கள் காதில் விழும்படி) பதில்கள் கூறிக் கொண்டே இருந்தார்.
அருகில் இருந்த இன்னொரு இமாம் இதை கவனித்துக் கொண்டார்.
தொழுகை முடிந்ததும் அவரிடம் "பாய்! ஜுமுஆ நாளன்று சொல்லப்படும் இரண்டாவது பாங்கிற்கு நாவால் பதில் சொல்வது கூடாது; மனதால் மட்டும் சொல்வதே போதும்." என்று பக்குவமாய் எடுத்துச் சொன்னார்.
الدر المختار وحاشية ابن عابدين (رد المحتار) (1 / 399):
وَيَنْبَغِي أَنْ لَا يُجِيبَ بِلِسَانِهِ اتِّفَاقًا فِي الْأَذَانِ بَيْنَ يَدَيْ الْخَطِيبِ
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக